ஆதரவாளர்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றார்களா ? இனி கவலை வேண்டாம்

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றார்களா ? இனி கவலை வேண்டாம்

மதுரையில் இந்தியன் குரல் இலவச உதவி மையம்
04-01-2014 சனிக்கிழமை காலை 10 மணிக்கு

புதன், 11 டிசம்பர், 2013

28% குழந்தைகள் போதை, குடி பழக்கங்களையும் உலகில் நடக்கும் வன்முறைக்கான காரணமாக

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் தங்கள் நாடுகளில் நடக்கும் வன்முறைக்கான முக்கிய காரணங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதில் இந்தியாவிலுள்ள 50% குழந்தைகள் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு முக்கிய காரணமான வறுமையே என்று குறிப்பிட்டிருக்கிறனர்.

மதுரவாயலில் பயங்கரம் கூலிப்படையை வரவழைத்து கணவன் கழுத்தை அறுத்து கொலை

மதுரவாயலில் பயங்கரம்

கூலிப்படையை வரவழைத்து கணவன் கழுத்தை அறுத்து கொலை

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:


வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வ...ருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

AFTER +2 என்ன படிக்கலாம்?

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

வியாழன், 5 டிசம்பர், 2013

தகவல் சட்டத்தை தவறாக சொல்லித் தரும் நண்பர்களை அடையாளம் காண்போம்

சம்பந்தப்பட்ட நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது 

யாரையும் மனம் நோக செய்யவேண்டும் என்பது நம் நோக்கமல்ல 
வழிகாட்டல் என்று தவறாக வழிகாட்டக் கூடாது என்பதே நமது ஆவல் 

அவர்களின் பணிக்கு வாழ்த்துக்கூறி இந்தப் பதிவை நீக்குகின்றேன் 

வியாழன், 28 நவம்பர், 2013

30 நாட்களில் கல்வி கடன்!


 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_859629.jpg

30 நாட்களில் கல்வி கடன்! தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, 30 நாட்களில், கல்வி கடன் பெறும் வழிமுறைகளை கூறும், தீபக்: நான், 'வாய்ஸ் ஆப் இந்தியா' அமைப்பின் உறுப்பினர். பொது மக்களின் உரிமைகளை, 'தகவல் அறியும் உரிமை சட்டம்' உதவியுடன், எளிதில் பெற்று தருவதே, எங்கள் அமைப்பின் நோக்கம். இச்சேவையை, இலவசமாகவே செய்கிறோம்.

புதன், 27 நவம்பர், 2013

செவ்வாய், 26 நவம்பர், 2013

DIPSOMANIA ( ALCOHOLIC MANIC ) DETOXIFICATION CENTER



https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT8lOAxuXcj0rKrLyuKK50665FNk18l0oxxOrWuAB3e1M-7B79Wகுடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள்.

மதுப்பித்து டிடோக்ஸ் மையம்

குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவ துறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது.

திங்கள், 25 நவம்பர், 2013

மதுபித்து நோய் நீக்கி மையம்


 
 
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: 
King Alcohol and his Prime Minister.jpg
குடிப்பழக்கம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
"மது அரசரும் அவரின் முதலமைச்சரும்" ஆண்டு 1820






குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும்.

RTI Act -2005 கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு 01-12-13

பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம் ?

திங்கள், 18 நவம்பர், 2013

தினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா?



தினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா?

>
“தினமும் சிறிதளவு மதுபானம் அருந்துவது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் தானே” எனக் கேட்டார் அவர்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

குடிப்பழக்கத்தை கைவிட சிறந்த வழி

1-drinkகுடியை மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம் விளம்பரங்கள்
http://www.addictionindia.org/images-ttkh/personal-recovery-tools-for-the-drug-dependent%20%28tamil-version%29.pdf

ஹோமியோவில் அற்புதமான பல மருந்துகள் -குடி நோயை மறக்க வைக்க உதவுகிறது

ஹோமியோவில் அற்புதமான பல மருந்துகள் -குடி நோயை மறக்க வைக்க உதவுகிறது ..அந்த மருந்துகள் இப்போது உங்களுக்கு ..அனால் ஆங்கிலத்தில் ..

HOMEOPATHIC THERAPEUTICS: 

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

குடிப்பழக்க சிகிச்சைக்காக பல தரப்பட்ட மருந்து வகைகள்

மருந்துகள்

குடிப்பழக்க சிகிச்சைக்காக பல தரப்பட்ட மருந்து வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பயன்பாட்டில் உள்ள மருந்துகள்
  • அன்டப்யுஸ் (டைசல்ஃபிரம்) என்ற மருந்து உடலில் காணப்படும் எதனோல் பிரிபடும் பொழுது உருவாகும் அசற்றலிடிகைட்டு என்ற வேதிப்பொருள் மேலும் நீக்காமல் இருப்பதைத் தடுக்கிறது. மது அருந்துவதால் ஏற்படும் பல வகையான தொக்கிய விளைவுகளுக்கு அசற்றலிடிகைட்டு காரணியாகும். அதனால் ஒட்டு மொத்தமாக மதுவை உட்செலுத்தும் பொழுது கடுமையான அசௌகரியம் ஏற்படும்: மிகவும் விரைவாகவும் நீண்ட நேரத்துக்கு நீடிக்கும் தொக்கிய விளைவு. இதனால் இந்த மருந்தை உட்கொள்ளும் நோயாளி, அதிக அளவில் மதுவை அருந்துவதை தடுக்கிறது. அண்மையில் நடந்த 9-ஆண்டுகள் நீடித்த ஒரு ஆய்வில் டைசல்ஃபிரம் மற்றும் அதனுடன் அதே போன்ற காபமைட்டு சேர்த்து தகுந்த மேற்பார்வையில் உட்கொண்டால், மதுவைத் தவிர்க்கும் விகிதம் 50 விழுக்காடுக்கு மேல் இருப்பதாக கண்டறியப்பட்டது.[89]
  • டேம்போசில் (கால்சியம் கார்பிமைட்) அன்டப்யுசைப் போலவே செயல்படுவது; ஆனால் டைசல்ஃபிரம் உட்கொள்வதால் ஏற்படும் மருந்துகளால் தூண்டப்படும் நச்சுத்தன்மை மற்றும் அயர்வு போன்ற உபாதைகள் இருக்காது.[89][90]
  • குறைந்த அளவு நல்ட்ரிக்சோன் ஒரு போட்டிக்கு ஈடான எதிர்ப்பைத் தூண்டும் மருந்தாகும், ஓபியோய்ட் ரிசப்டார் அல்லது ஓபியோய்ட் வாங்கிகளில், அவை நமது உடல் என்டோர்பின் மற்றும் அபின் கலந்த மருந்துகளை பயன்படுத்தும் ஆற்றலை திறம்படத் தடுத்துவிடும். நல்ட்ரிக்சோன் மூலம் மதுவுக்கான ஏக்கத்தை குறைத்து, தவிர்க்கும் ஆற்றலை மேம்படுத்தலாம். மது நமது உடலில் இருக்கும் என்டோர்பின்களை வெளிப்படுத்தும், அதனால் டோபமைன் எனப்படும் நரம்பணுக்குணர்த்திகள் கிளர்ச்சி அடையும்; அதனால் நமது உடலில் நல்ட்ரிக்சோன் இருந்தால், அது மதுவால் கிடைக்கும் இன்ப மயக்கத்தை மறைத்துவிடும்.[91]
  • அகம்ப்ரோசெட் (காம்ப்ரால் எனவும் அறியப்படும்) மூளையின் வேதியியலை சரிசெய்கிறது, மது சார்புள்ளமை காரணம் க்ளுடமேட், ஒரு வகையான நரம்பணுக்குணர்த்தி பின்வாங்கலுக்குப் பின்னான கட்டத்தில் கிளர்ச்சியுறுவதை தடுக்கிறது.[92]]] அமெரிக்காவின் தி பூட் அண்ட் ட்ரக் அட்மினிச்ட்றேசன் (FDA) உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த மருந்திற்கு 2004 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்துள்ளது.[93]
பரிசோதனைக்குட்பட்ட மருந்துகள்
  • டோபிரமெட் (குறியீட்டுப் பெயர் டோபாமாக்ஸ்), இயற்கையாக சர்க்கரையில் காணப்படும் ஒற்றைச் சாக்கரைடு டி-ஃப்ரூக்டோசு, மது அருந்துபவர்கள் அவர்கள் குடிக்கும் அளவைக் குறைக்க பயனுள்ளதாகும். டோபிரமெட் கிளர்ச்சியூட்டும் க்ளுடமெட் வாங்கிகளை தடுத்து, டோபாமைன் வெளியீட்டைத் தடுக்கிறது மேலும் தடுக்கும் ஆற்றல் கொண்ட காம்மா-அமினோ-பியூட்ரிக் அமில செயல்பாடுகளை தூண்டுகிறது. 2008 ஆம் ஆண்டில் மேற்கொண்ட டோபிரமெட் பற்றிய மதிப்பீட்டில், இம்மருந்தின் பயன்பாடு சாதகமாக இருப்பதாகவும், இருந்தாலும், போதிய அளவு தரவுகளின் பக்கவலு கிடைக்காததால், மது சார்புள்ளமை தவிர்த்தலுக்கான பயன்பாட்டிற்கு, தற்காலத்திற்கு, தள்ளி வைக்க முடிவுசெய்தது.[94] 2010 ஆம் ஆண்டில் நடத்திய மதிப்பீட்டில், டோபிரமெட் தற்போது நிலுவையில் இருக்கும் மருந்துகளை விட ஆற்றல் படைத்ததாகக் கூறப்பட்டது. டோபிரமெட் திறம்பட மதுவிற்கான ஏக்கத்தை குறைத்து, மது அருந்துவதில் இருந்து பின்வாங்குதலில் காணப்படும் கடுமையை குறைக்கும் மேலும் மனிதனின் வாழ்க்கைத்தர விகிதத்தை மேலும் உயர்த்தும்.[95]
எதிர்விளைவுகளுடன் கூடிய மருந்துகள்
  • பென்ஸோடியாஸெபைன்கள், மது அருந்துவதில் இருந்து விலகுவதற்கு பயனுள்ளதாக இருந்தாலும், நீண்ட காலத்துக்கு பயன் படுத்தினால் குடிப்பழக்கம் மேலும் கடுமையாக மாறிவிடும். பென்ஸோடியாஸெபைன்களைப் பயன்படுத்தும் கடும் குடிகாரர்களை விட, பயன்படுத்தாதவர்கள் மதுவை தவிர்ப்பதற்கான சூழ் இடர் அதிகமாக உள்ளது. உறக்கமின்மை மற்றும் ஏக்கம் போன்ற நிலைமைகளை நிர்வகிக்க இந்த வகைப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.[96] பென்ஸோடியாஸெபைன்கள் அல்லது உறக்க முடுக்கி மருந்து, தூக்க ஊக்கி மருந்துகள் ஆகியவை பயன்படுத்தினால் 25 விழுக்காடுக்கும் மேல் உள்ள சிகிச்சைக்கு உடபட்டவர்களில் ஒருவர் அதன் விளைவுகளில் இருந்து மீள நீண்ட நாட்கள் ஆகும் என்று ஒரு ஆசிரியர் தெரிவித்துள்ளார். பென்ஸோடியாஸெபைன்கள் எடுத்துக்கொண்டாலும், தாம் நிதானத்துடன் இருப்பதாக நோயாளிகள் தவறாக நினைக்கின்றனர். நீண்ட நாட்களாக பென்ஸோடியாஸெபைன்கள் கொண்ட மருந்துகளைப் பயன்படுத்துவோர், அவசரமாக பின்வாங்குதல் கூடாது, அதனால் கடுமையான மனக்கலக்கம் மற்றும் அச்சம் ஏற்பட்டு, மது மயக்கத்திற்கான சூழ் இடரைப் பெருக்கும். 6–12 மாதங்களுக்கு அளவைக் குறைக்கும் பயன்பாடு வெற்றிகரமாக உள்ளது, பின்வாங்கும் பொழுது, அதன் ஆற்றல் குறைந்து காணப்படும்.[97][98]

திங்கள், 4 நவம்பர், 2013

Alexander Graham Bell

Alexander Graham Bell

Dr. A. P.J Abdul Kalam Azad

Dr. A. P.J Abdul Kalam Azad

Albert Einstein

Albert Einstein

post
Indias One Of The Greatest Scientist Albert Einstein
BIBLIOGRAPHY OF Albert Einstein

Thomas Alva Edison

Thomas Alva Edison

post
Indias One Of The Greatest Scientist
BIBLIOGRAPHY OF Thomas ALVA Edison

Galileo Galilei

Galileo Galilei

post
Indias One Of The Greatest Scientist
BIBLIOGRAPHY OF GALILEO GALILEI

Madam Marie Curie

Madam Marie Curie

Blaise Pascal

Blaise Pascal

Sir Isaac Newton

Sir Isaac Newton

Alfred Binett

Alfred Binett

Alexander Fleming

Alexander Fleming

post
Alexander Fleming

Anna Hazare

FIGHT AGAINST CURROPTION WITH ANNA HAZARE
BIBLIOGRAPHY OF ANNA HAZARE

Mahatma Gandhi

Mahatma Gandhi also respectfully called as The Father of The Nation

Shivram Rajguru

Shivram Rajguru

Shivram Rajguru also known by the name Raghunath

Shaheed Bhagat Singh

Shaheed Bhagat Singh
Born on: September 27, 1907
Born at: Khatkar Kalan in Nawanshahar district of Punjab
Died on: March 23, 1931.
Studies at: D.A.V. School in Lahore.

Subhash Chandra Bose

Subhash Chandra Bose

Bhimrao Ambedkar


Bhimrao Ambedkar

செவ்வாய், 22 அக்டோபர், 2013

மனமிருந்தால் பள்ளிக்கூடம் உண்டு!

மனமிருந்தால் பள்ளிக்கூடம் உண்டு!
நல்ல மனம் வாழ்க ! இது போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்யுது ! *************** டெனால்டு ராபர்ட் originally shared: “ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது;

வியாழன், 17 அக்டோபர், 2013

கேன் தண்ணீரா கிருமிகள் கழுநீரா

கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட தண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது.

திங்கள், 14 அக்டோபர், 2013

நோட்டோ - சரியா தவறா? இதனால் மாற்றம் வருமா?

நோட்டோ - நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் தனி பொத்தான் வாக்கு இயந்தரத்தில் பொறுத்த உத்திரவு.

வாக்காளர்கள் ரகசியமாக தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்ய வாக்கு அளிக்க வகை செய்யும் பொத்தான் என்ற அளவில் இந்த உத்தரவை வரவேற்கலாம். இந்த பொத்தானை வைத்து ஒட்டு போடுவதால் என்ன மாற்றம் நிகழும்?

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

காசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தேசிய அவமானம்

கடமையை செய்; பலனை எதிர்பாராதே' என்பது கீதைமொழி. வாழ்க்கை நாடகத்தில் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடந்தாலே உரியது கிடைக்கும். ஆனால் இன்றைய சூழலில், கடமையை செய்வதற்கே "லஞ்சம்' என்றாகி விட்டது. அரசு பதவி என்பது பணம் பண்ணுவதற்கே எனக்கருதி, "வாரிச் சுருட்டு'வதில் வல்லவர்களாக திகழ்கின்றனர் சில அதிகாரிகள். லஞ்ச ஒழிப்பு போலீசார் தினமும் ஒருவரை, "தலையில் முக்காடு போட' வைத்தாலும், எக்கேடும் கெடாதவர்கள்போல இக்கலையில் வல்ல அரசு ஊழியர்கள், இன்னும் "கையேந்தி' காலம் தள்ளத்தான் செய்கின்றனர்.குறைந்த சம்பளம் பெறும் கீழ்நிலை ஊழியர்கள் முதல், அதிக சம்பளம் பெறும் மேல்நிலை அதிகாரிகளை வரை "லஞ்ச'ப்பேய் பிடித்து ஆட்டுகிறது. இதனால் அப்பாவிகள், சாமானியர்கள் வேலை நடக்காமல், விரக்தியடைகின்றனர். உணவுப் பொருளில் கலப்படம் செய்வது, சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது என்றால், லஞ்சம் பெறுவது "தன்னையே விற்பதற்கு' ஒப்பானது என்று அறிய வேண்டும்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

மாணவர்களின் வன்முறை சொல்லும் செய்தி என்ன

மூன்று கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கல்லூரி முதல்வரைக் கொலை செய்தனர்
8ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலை செய்தான்
8ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியரின் கள்ளத் தொடர்பு அம்பலம்
கழிப்பறையில் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு வந்து தேர்வு எழுதிய பள்ளி மாணவி

தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

திங்கள், 7 அக்டோபர், 2013

ஊடகவியலாளர்களின் சுயமரியாதையைக் காக்க எழுக தோழர்களே!

நன்மக்களே
மதுரை மாநகராட்சியில் முறைகேட்டை வெளியிட்ட ஊடகவியலாளர் திரு ராமானுஜம் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இந்தியன் குரல் வன்மையாக கண்டிக்கின்றது.

இது தொடர்பான கண்டனத்தைப் பதிவு செய்து மாநில முதலமைச்சர் மற்றும் கவர்னருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது இந்தியன் குரல்

நாம் 1947 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டோம் ஆயினும் சில சம்பவங்கள் நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கின்றோமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது

ராணுவ மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங். / பொது நர்சிங் மற்றும் மிட்வொய்ப் பயிற்சி படிப்புக்கு


ராணுவ மருத்துவ மனைகளில் கீழ் உள்ள நர்சிங் கல்லூரி, பள்ளிகளில் 4 ஆண்டு பிஎஸ்சி நர்சிங், மூன்றரை ஆண்டுகள் பொது நர்சிங் மற்றும் மிட்வொய்ப் பயிற்சி படிப்புகளுக்கு பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. படிப்பு முடிந்ததும் 5 ஆண்டுகள் ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.

தகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி (முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்)


நன்மக்களே  வணக்கம்
சுய மரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல், தன குடும்பத் தேவை உள்பட அனைத்து தேவைக்கும் அரசிடம் இருந்து பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் மூலம் தீர்வு. மனுக்களை எழுத சொல்லித்தர இரண்டாம் நிலைப் பயிற்சி
இலவச தொடர் பயிற்சி 17-11-13  அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
 முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம்

NLC  நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை!


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைக்குச் சேர விரும்பும் என்ஜினீயர்கள் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள கேட் தேர்வை எழுத வேண்டும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம் கிடைக்கும்.

ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி

ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு  தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது.

கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோர்ஸ்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.


இன்ஜினியரிங் துறையில் நிதியுதவி பெற்று மேற்படிப்பைத் தொடர மற்றும் பி.எச்டி, அறிவியல் படிப்புகளுக்கு உதவித் தொகை பெற கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோர்ஸ்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு



சஷாத்ர சீமாபால் என்ற மத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க .

சனி, 5 அக்டோபர், 2013

கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்

நன்மைக்களே
பாராளுமன்ற நிலைக்குழு 4-10-2013 மற்றும் 5-10-13 ஆகிய இரண்டு தினங்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது சென்னை ராயல் மிரிடியான் ஹோட்டலில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது

வியாழன், 3 அக்டோபர், 2013

தமிழகத்தில் ஈழப் போராட்டம் ஒரு கோணம் - ஆண்டவா இதில் உண்மை இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன்

நேற்று ஒரு அன்பரிடம் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, ஒரு தகவல் சொன்னார் உண்மையானு தெரியாது இருந்தாலும் அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி?

ஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எப்படிங்க கல்விக்கடன் வாங்கி நான் படிப்பது ?

திங்கள், 30 செப்டம்பர், 2013

online signature campaign appealing standing committe to save the nation



SIGN PETITION TO STANDING COMMITTEE


Dear citizens of india,
We voice of indian creates this online signature campaign appealing standing committe to save the nation and its people.
Raie your voice ! Sign the petition !
save rti
 
ANNOUNCEMENT BY STANDING COMMITTEE:
The Ministry of Personnel, Public Grievances, Law and Justice Invites Suggestions on The Right to Information (Amendment) Bill, 2013 


you don" go or come were you free that time kindly click this link to sing petition and share your friends
 http://www.voiceofindian.org/sign-petition-to-standing-committee/ 


அவசரம் ; Invites Suggestions on The Right to Information (Amendment) Bill, 2013


அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்க தகவல் சட்ட திருத்த மசோதா

The Right to Information (Amendment) Bill, 2013


  • The Right to Information (Amendment) Bill, 2013 was introduced in the Lok Sabha on August 12, 2013. The Bill amends the Right to Information Act, 2005 (RTI Act).

  • In June 2013, the Central Information Commission held six political parties to be public authorities under the RTI Act and hence subject to the transparency and information requirements under the Act.

  • The amendment Bill removes political parties from the ambit of the definition of public authorities and hence from the purview of the RTI Act.

  • The amendment will apply retrospectively, with effect from June 3, 2013.

  • The Statement of Objects and Reasons of the Bill states that there are already provisions in the Representation of People Act, 1951 as well as in the Income Tax Act, 1961 which deal with transparency in the financial aspects of political parties and their candidates. It also adds that declaring a political party as public authority under the RTI Act would hamper its internal functioning and political rivals could misuse the provisions of the RTI Act, thus affecting the functioning of political parties.

இந்த மசோதா பாராளுமன்றக் கூட்டத்தொடரில் 12-8-13 1அன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் எதுவும் நடைபெறாமலேயே நிலைக்குழுவின் பரிந்துரைக்கு 5-9-13 அன்று அனுப்பப்பட்டுள்ளது . இந்த திருத்த சட்டம் குறித்து மக்கள் 5-10-13 ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்குமாறு நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது ஆகவே தாங்கள் தங்களது கருத்துக்களை உடனடியாக அனுப்பிட இந்தியன் குரல் கேட்டுக் கொள்கின்றது.

1. The Ministry of Personnel, Public Grievances, Law and Justice Invites Suggestions on The Right to Information (Amendment) Bill, 2013


Last Date: 5 October 2013


The Right to Information (Amendment) Bill, 2013, as introduced in the Lok Sabha on 12 August, 2013 and pending therein, has been referred to the Department-related Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice headed by Shri Shantaram Naik, M.P., Rajya Sabha for examination and report thereon within a period of three months. The Bill intends to amend the Act to keep the political parties out of the purview of the RTI Act, with a view to remove the adverse effects of the decision of the Central Information Commission dated 03.06.2013 which has held that political parties are public authorities under section 2 (h) of the said Act.

Those desirous of submitting memoranda to the Committee may send two copies thereof, either in English or Hindi, to Shri Ashok Kumar Sahoo, Joint Director, Rajya Sabha Secretariat, 222, Second Floor, Parliament House Annexe, New Delhi - 110001 [Tel: 23035365 (O), Fax: 23016784, E-mail: rs-cpers@sansad.nic.in within 15 days of publication of the advertisement.

Press Release
Bill Text
இந்தியன் குரல் தனது கருத்தை கீழ்க்கண்டவாறு ஒப்திவு செய்து அனுப்பியுள்ளது தாங்கள் விரும்பினால் அதை அப்படியே உங்கள் பெயரை இட்டோ அல்லது உங்களது கருத்துக்களை இணைத்தோ இ மெயில் அல்லது பேக்ஸ் அனுப்பிடவும் தபாலில் அனுப்பிட கால அவகாசம் இல்லை ஆகவே  கவனத்துடன் இந்த திருத்தத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை உடனே அனுப்பிடவும்.

Madam/ Sir,
   If you want to bring all the Political Parties in the ambit of RTI Act., 2005 ie. to make them answerable to the people , YOU MAY FORWARD THE ATTACHED LETTER to the Parliamentary Standing Committee rs-cpers@sansad.nic.in                  
VOICE OF INDIAN  94434  89976    9444305581

இந்தியன் குரலின் ஆலோசனை ..............

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

Aware about 100 percent of college job placement

போலி இன்டர்வியு பற்றி விழிப்புணர்வு பெற
நடந்தபின்னர் போராடுவதை விட வருமுன் அறிந்து தடுப்பதே சிறப்பு
உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு தெரியும் வண்ணம் அனுப்பிடுங்கள்

வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமையுண்டு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு



 இந்திய வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் - இந்தியன் குரல் இதற்காக பல்வேறு கட்ட மனுக்களை அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் அனுப்பியிருந்தது இது உண்மையான மக்களாட்சியை மலரச் செய்ய மக்களுக்கு கிடைத்துள்ள ஆயுதம்

நண்பர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இந்த அறிய தீர்ப்பை தெரியப்படுத்த ஒரு சொடுக்கில் பகிர்ந்து பரப்புரை செய்யுங்கள்

சனி, 21 செப்டம்பர், 2013

கூடங்குளம் போராட்டம் வெற்றியா? பாடமா?


நான் கூடங்குளம் போராட்டத்தையோ போராடி வரும் மக்களையோ தவறாகவோ குறைகூறவோ இந்தப் பதிவை எழுதவில்லை பார்வைக்காகவே இந்த பதிவை எழுதுகின்றேன. எந்த ஒரு மக்கள் நலன் சார்ந்த போராட்டமும் வெற்றிபெற்றதாக நான் அற்யவில்லை. ஆனாலும் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி தினமும் எங்காவது ஒரு இடத்தில் மக்களின் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கு ........

வீடு மனை வாங்கும்போது நாம் ஏமாறாமல் இருக்க காணொளி


வெள்ளி, 20 செப்டம்பர், 2013

பாலியல் குற்றங்கள் ஏன் ? பேச்சு பேச்சாத் தான் இருக்கணும்

 
பாலியல் பிரச்னைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றார்கள்
தீர்வு ?

பணத்தை பையில் போட்டு யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வது தான் பாதுகாப்பு அதை விடுத்து என்னுடைய பணம் எடுத்துச் செல்வது என் உரிமை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்வேன் என்று கையில் வைத்து ஆட்டிக்கொண்டு சென்று பாருங்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை? - அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்

"தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இட ஒதுக்கீட்டு பட்டியலில் பொது பிரிவில் சேர்க்கப்படுவார்கள் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்"- புதிய இட ஒதுக்கீடு அமல்?

புதன், 18 செப்டம்பர், 2013

சொத்து பிணையில்லை லட்சக்கணக்கில் மானியத்துடன் வங்கிக் கடன் மகளிர் குழுக்கள் புண்ணியத்தால் மெகா மோசடி - தமிழகம்


நீங்கள் வாங்கும் கடனுக்கு பிணையம் தேவையில்லை உத்திரவாதம் தேவையில்லை நாங்கள் சொன்னால் போதும் மத்திய அரசு திட்டம் மாநில அரசின் திட்டம் ரிசர்வ் வங்கியின் திட்டம் வாருங்கள் வாருங்கள் 

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

போலி கேம்பஸ் இண்டர்வியூ - கல்லூரிகள்+ கம்பெனி ஹச் ஆர் ஓ + தரகர்கள்

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியு நடைபெறும் நேரமிது. கேம்பஸ் இன்டர்வியு இன்றைய பொருளாதார மந்த நிலையில் பெரும்பான்மை நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வரும் கல்லூரிகளில் மட்டுமே  கேம்பஸ் நடத்திட வாய்ப்பு.

வியாழன், 12 செப்டம்பர், 2013

உங்களால முடியாதுன்னு எனக்கு தெரியும் உங்கள் நண்பர்களை மட்டும் அனுப்புங்க


நன்மக்களே  வணக்கம்
உண்மையா சொல்றேங்க ஒரு எம் எல் ஏ அல்லது எம் பி என்னவெல்லாம்  செய்ய முடியுமோ அதைவிட ஒருபடி கூடுதலாக செய்யலாம் எப்படி? பயிற்சியில்

கிடப்பில் இருக்கும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது தீர்வு காண்பது எப்படி?

நண்பர்களே நீங்கள் ஒரு சொடுக்கில் பகிர்ந்து உதவலாமே

புதன், 11 செப்டம்பர், 2013

எம் எல் ஏ, எம். பி க்கள் கைவரிசை - அரசுப் பணிக்கு லஞ்சம் - அம்பலம்

நன்மக்களே! 
நேர்மையான இளைஞர்களுக்கு பணம் கொடுக்க மறுக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லை என்று கூறுவதும் லஞ்சம் பெற்று நியமனம் செய்வதும் ஒன்றே 

படிக்கும் பிள்ளைகளே படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களே நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று வேலைக்கான உத்தரவு வரும் என்று காத்திருக்கும் நேர்மையான இளைஞனே உனக்கு இந்த தேசத்தில் வேலையில்லை என்று சொல்லவா உங்களைப் பெற்றவர்களும் மற்றவர்களும் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தீர்கள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மான்புமிகு மக்கள் சேவகர்களின் சிபாரிசு அம்பலம் - தகவல் உரிமைச் சட்டத்தால் அம்பலம்

நன்மைக்களே!

ம்னக்களுக்காக உழைக்கும் மக்கள் காவலர்கள் தேர்தலில் வெற்றிபெற்று மக்களுக்கு உழைக்கும் லட்சணத்தைப் பாரீர்

இவர்களுக்கு ஒட்டுப்போட்ட மக்களைத் தான் தூக்கில் போடவேண்டும்

திங்கள், 9 செப்டம்பர், 2013

அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்-நடவாமல் இருக்க தீர்வான தீர்வு

கோவை : "தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது' என்கின்றனர், மன நல நிபுணர்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013

பின்வாங்கியது அரசு மக்கள் போராட்டத்திற்கு வெற்றி




அரசியல் கட்சிகளுக்கு தகவல் சட்டத்தில் விலக்களிக்கும் தகவல் சட்டதிருத்தம் 2013 மசோதா தாக்கல் குறித்து முடிவெடுக்க பாராளுமன்ற நிலைக்குழுவின்  பரிசீலனைக்கு  அனுப்பியது மத்திய அரசு.இதனால் இந்த கூட்டத்தொடரிலும் இனி வரும் கூட்டத்தொடரிலும் இந்த மசோதா நிறைவேற்றிட வாய்ப்பில்லை தேர்தல் முடிந்து புதிதாக அமையும் அரசு  முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கரூரில் ஊர்வலம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

இடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்
நாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு 

திங்கள், 2 செப்டம்பர், 2013

கரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

இடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்
நாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு 

சனி, 31 ஆகஸ்ட், 2013

மாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்?! (மாசு கட்டுப்பாடு வாரியம்)

     தூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை, தாவரவழி மருந்தூட்டம்  இந்த சொற்களை படித்ததும் கேட்டதும் உண்டா இவைகளைப் பற்றி அறியவில்லை என்றால் நீங்கள் இயற்கையை இந்த உலகத்தை மாசுபடுத்துகின்றீர்கள் என்று அர்த்தம். இவையெல்லாம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மாசுக்களை அகற்ற, கண்டறிய  பயன்படுத்தும் கருவிகளில் சிலவற்றின் பெயர்கள்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :

 மாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்!



நோயற்ற வாழ்வு வாழ நம் சந்ததிகள் நலமுடன் வாழ சுகாதாரம் சுற்றுச்சூழல் பேணி காக்கவேண்டிய அரசு(மக்கள்) துறை சரியாக செயல்படுகின்றதா அலுவலர்கள் தம் கடமையைச் செய்கின்றார்களா என்று மக்களாட்சியின் எஜமானர்களாகிய மக்கள் தான் கண்காணிப்பு செய்யவேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டவும் குறைகளை சொல்லவும் விழிப்புணர்வு பெற்ற மக்கள் தயங்காமல் முன் வரவேண்டும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடியும்

நன்மக்களே!

இனி வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டேன் உள்நாட்டு தயாரிப்புக்களையே பயன்படுத்துவேன் என்று நாம் உறுதியேற்க வேண்டும்



இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டு போகின்றது. அதற்கு காரணம் அரசு கையாலாகா தனம் என்றோ அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று பேசும் நாம் செய்யவேண்டியதைச் செய்யாமல் வாய் கிழியப் பேசுவதால் என்ன பயன்?

புதன், 14 ஆகஸ்ட், 2013

மாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்

நண்பர்களே இ மெயிலில் வந்த காடிதம் இது இதை அப்படியே உங்களுக்கும்

ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்ற

ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் ஆனாலும் அதிகாரிகளின் துணையில்லாமல் ஊழல் நடைபெற இயலாது என்பதற்கு இது ஒரு சாட்சியம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆன்லைன் பெட்டிஷன்

நன்மக்களே
 இந்தியத் திருநாட்டின் இந்திராகாந்தி  ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு பிறகு இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டதிருத்த மனு இந்திய மக்களுக்கு எதிரான  ஆபத்தான அடக்குமுறையை ஊழலை நியாயப்படுத்தும் திருத்தம் ஆபத்தானது. 

சனி, 10 ஆகஸ்ட், 2013

84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா 9486172017 நீங்களும் வாழ்த்தலாமே

வணக்கம் நண்பர்களே மூத்த குடிமக்களுக்கு இந்த சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை போலும்
 எண்பத்து நான்கு வயது  கொண்ட காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா சாதனை

நீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்த்து எஸ் எம் எஸ் அனுப்பலாமே

சே.தமிழ்ச்செல்வன். 08056201875

எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை எண்ணூர் அசோக் லேலட் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் திரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் . அந்நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் துணை செயலாளராக பணியாற்றியவர் 1989 ஆம் ஆண்டு பனி ஓய்வு பெற்றார்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

உங்களுக்கும் இருக்கின்றதா? மண்ணாசை பொன்னாசை பொருளாசை

என்னாது ஆசையே ..................
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நல்ல சிந்தனை திறன் (பகுத்தறிவு) என்ற ஒரு அறிவு தான் வித்தியாசம் என்கிறார்கள் விலங்குகளும் தினமும் உழைக்கின்றது, பசிக்கு ருசியான உணவு உண்கின்றது. ஆசை தீர உடல் உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றது நேரத்தில் தூங்குகின்றது . இன்றைய நாகரீக மனிதன் என்று சொல்லிக்கொள்பவர்களும் நேரமில்லை என்று சொல்பவர்களும் இதைத் தான் செய்கிறார்கள்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தகவல் சட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் தகவல் தரவேண்டும் என்பதற்கான விளக்கம் அடங்கிய மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தற்பொழுது நடைபெறுகின்றது உங்கள் அமைப்பின் பெயரிலோ அல்லது இந்தியன் குரல் பெயரிட்டோ அச்சிட்டு உங்கள் பகுதியில் விநியோகம் செய்யுங்கள் எத்தனை துண்டுபிரசுரங்கள் என்ற எண்ணிக்கையை எந்த ஊர் என்ற விபரத்தை இந்தியன் குரல் அமைப்பிடம் தெரிவிக்க தொடர்புகொள்ளுங்கள் 9444305581 துண்டு பிரசுரம் மாதிரி கீழே

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நீங்கள் வாழும் மனிதன் தானா? இல்லை உயிருடன் நடமாடும் பிணமா? இந்தியக் குடிமகனுக்கு மட்டும் !


 ஒரு இயந்திரமா அல்லது இயந்திர மனிதனா கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடத்ததா? இன்று இப்படி பாட்டும் பாடலாம் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கேள்வி கேட்பது சுலபம் நல்ல கேள்விகள் கேட்பது எவ்வளவு கடினம் தெரியுமா? நல்ல கேள்வி ஒரு மனிதனின் சிந்தனையை தூண்டவேண்டும் உங்கள் சிந்தனை தூண்டப்பட்டால் நீங்கள் பிணம் இல்லை என்று அர்த்தம் 

செவ்வாய், 30 ஜூலை, 2013

" மனதுக்கு மகிழ்ச்சியான அன்புடன் ஓர் அழைப்பு" ஒரு அலைபேசியின் "அலறல்" உண்மை சம்பவம்

ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுக்கான அந்த அந்த துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அன்று ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனை தீர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவார்கள். அங்கே நாங்களும் இந்தியன் குரல் நண்பர்களுடன் தவறாமல் சென்றுவிடுவோம்.

வியாழன், 25 ஜூலை, 2013

ஒருகோடி இலக்கு 30 தினங்களில் ஒரு லட்சம் நிச்சயம்

அறிவார்ந்த நன்மக்களே!
நம் அன்றாட வாழ்வில் கொலை கொள்ளை கற்பழிப்பு கூட்டுக் கொள்ளை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது என்பதை அறிவீர்கள்.

காந்தி தேசம் காக்க பாரதத் தாயின் புதல்வர்களே எழுக.!

மதிப்பிற்குரிய தேச பக்த நன்மக்களே!
வணக்கம்,

 மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகள் தகவல் தரவேண்டும் என்று உத்தரவிட்டபிறகும் தகவல் தரமாட்டோம் சட்ட திருத்தம் கொண்டுவருவோம் என்று அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன என்பதை அறிவீர்கள்

செவ்வாய், 16 ஜூலை, 2013

காந்தி தேசமே காக்க வேணுமே

அரசியல் கட்சிகளே - வாக்காளர்களே எச்சரிக்கை
வாக்காளர்களே விலைபோகும் இதியாவைக் காப்பாற்ற வாரீர்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

கூடங்குளம் -கதை கதையாம் காரணமாம்

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு வழியாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் தொடங்கிய திட்டம்,

புதன், 10 ஜூலை, 2013

பா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்

பாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது.
கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண்டனுக்கு என்ன செய்தீர்கள்.

தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் பதில் அளிக்கப்பட வேண்டும்?

தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் பதில் அளிக்கப்பட வேண்டும்? விளக்கம் காண

நாங்கள் பொது அதிகார அமைப்பாக செயல்பட மாட்டோம் எனும் அரசியல் கட்சிகளுக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர முயலும் மத்திய அரசும். விரிவான அலசல்

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஒரே நாளில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும். Enhancing Rupee Valuation

இந்த சரிவைத் தடுக்க முடியும்......!!!!!!

ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

ஆசையில் ஓர் கடிதம்

என் உள்ளத்து எண்ணங்களை என் மன ஆசைகளை என் மன குமுறல்களை நான் நேசிக்கும் இந்தத் தமிழால் எழுத்துக்களாய் நல முத்துக்களாய் ஒரு கடிதமாக வரைந்து எனக்கு பிடித்த நான் நேசிக்கும் எனக்கே சொந்தமான எனக்கு உரிமையான என்னைப் பாதுகாக்கும்

சனி, 6 ஜூலை, 2013

காலால் இட்ட வேலையை தலையால் செய்வோம் - தேர்தல் வாக்குறுதி, அரசியல் கட்சிகளே!

ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்சியும் அவர்கள் வெளிநாட்டின் கைக் கூலிகள் அவர்களுக்கு வெளிநாட்டு உள்நாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, தீவிரவாதிகளை வைத்து மிரட்டுகின்றார்கள், தீவிரவாதிகளை ஏவி கொலை செய்துவிட்டார்கள் என்றும் தீவிரவாதிகளுக்கு நெருக்கமானவர்கள் அந்தக் கட்சிக்கு பணம் தருகின்றார்கள் என்று அரசியல் கட்சிகளே நீங்களே மற்றவரைக் குற்றம் சொல்லுகின்றீர்களே!

 நீங்கள் சொல்லும் தகவல்களை கேட்டு பொது மக்களாகிய நாங்கள் கவலை கொள்கின்றோம். ஓட்டுப் போட மக்களுக்கு பணம் செலவு செய்கின்றோம் அதனால் நாங்கள் சம்பாதிக்கின்றோம் என்று நீங்கள் கூறுவதும் மக்களாகிய எங்களுக்கு பயமாக உள்ளது ஆகவே உங்கள் கட்சிக்கு பணம் எப்படி வருகின்றது என்று தெரிந்து கொள்வது அவசியம் ஆகின்றது . தவறினால் அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்று  உங்கள் சுய லாபத்திற்காக எங்கள் தேசத்தையும், எங்களையும், எங்கள் உடமைகளையும் தனியார் மாயம் என்று சொல்லி  ஏலம் போட்டு விற்று விடுவீர்களே!

மக்களுக்காக சேவை செய்யவே கட்சி நடத்துகின்றோம். மக்கள் சார்பாக ஆட்சி நடத்தி வருகின்றோம். ஜனநாயக ஆட்சி நடத்தி மக்களுக்கு சேவைசெய்யும் கட்சி என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியை அப்படித்தான் நடத்துகின்றீர்களா உங்களது கட்சி வேட்பாளர் தேர்வு நியாயமாக நேர்மையாக நடத்தப் படுகின்றதா அதற்கு மேலாக உங்கள் கட்சி அல்லாத யாரேனும் பணம் கொடுத்து வேட்பாளர் தேர்வில் வெற்றி பெருகின்றாரா என்ற விபரம் தானே கேட்கின்றோம் தரவே இல்லையே
 
நீங்கள் அறிவித்த போராட்டங்களில் கலந்து சொத்துக்களை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த , கட்சிக்காக உயிர்நீத்த உங்கள் கட்சி உறுப்பினர்கள் அவர்கள்தம் குடும்பம் அவர்களது பிள்ளைகள் ஆகிய உங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு உங்கள் கட்சி என்ன செய்துள்ளது?. அவர்களின் இன்றைய குடும்ப நிலை என்ன? அவர்களால் கோடிகளை சம்பாதிக்கும் அவர்களது தியாகத்தைக் காட்டி தேர்தலில் வென்ற கட்சி கட்சிக்காக உயிரிழந்தவர்களது கணக்காவது ப்வைத்திருக்கின்றதா?
 
உங்களது கிளைகட்சிக்கும், மாவட்ட தலைநகரம், மாநில தலைநகரம் என எல்லா இடங்களிலும் கட்சி அலுவலகம் இலவச இடம் கட்டிடம் வரிவிலக்கு மின் கட்டண சலுகை, தேர்தல் நேரங்களில் தொலைகாட்சி மற்றும் பாது காப்பு இலவச தொலைபேசி இணையதள வசதி உள்ளிட்ட அரசின் பல சலுகைகள்நீங்கள் பெறுகின்றீர்கள். கட்சி சொத்துக்கள் யாவும் பொது சொத்து அல்லவா ஆகவேதான் நீங்களும் பொது அதிகார அமைப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் கேட்டால் தரவேண்டிய கடமையும் பொறுப்பும் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் மத்திய தகவல் ஆணையம் 03.06.13 அன்று உத்தரவிட்டது. 
தேர்தலில் என்ன வாக்குறுதி அளித்துள்ளீர்கள் அதை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தரவில்லை ஆனால் ஒப்படைக்கப்பட்டது.

2 ஜி அலைக் கற்றை , காமல் வெல்த் , கார்கில் அடுக்குமாடி, நிலக்கரி சுரங்கம் ஊழல் போன்று அனைத்து ஊழலும் செய்வோம் அளவுக்கு அதிகமான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து வைப்போம் அடுத்து வரும் தேர்தலில் மக்களுக்கு இலவசம் கொடுக்க வேண்ண்டும் என்பதற்காக மக்களே உங்களுக்காக கொள்ளையடிப்போம் ஊழல் செய்வோம் என்று வாக்குறுதி தரவில்லை.

விலைவாசிகளை உயர்த்துவோம் மின் கட்டணங்களை உயர்த்துவோம் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்துவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை.
 ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக நடந்த காரணத்தால் என்ன வாக்குறுதி அளித்தீர்கள் அதில் எத்தனை நிறைவேற்றினீர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்ன அதற்காக என்ன தீர்மானங்கள் உங்கள் கட்சியில் நிறைவேற்றியுள்ளீர்கள் அத தீர்மானங்களின் நகளினைக் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள்.
 உங்களது கட்சி மினிட்ஸ் புத்தகத்தில் அந்த தீர்மானங்கள் உள்ள பக்கங்களின் நகல் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள். கொடுக்கவில்லையே  மூன்று ஆண்டுகள் போராடியும் தர மறுத்ததால் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட 13 முன்னாள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உத்தரவு வழங்கியுள்ளது. அப்படியும் தரவில்லையே


மக்கள் ஓட்டுப் போட ஓட்டுக்கு பணம் கேட்கின்றார்கள் என்று மக்கள் மேல் பலி போடுகின்றீர்களே. உங்கள் தவறுக்கு மக்களையும் கூட்டாளியாக்க முயன்று அதில் வெற்றி போன்ற மாயத்தை செய்யும் தந்திரத்தால் எமாற்றுகின்றீர்களே. அவர்கள் கேட்டார்களா ஓட்டுக்கு பணம் கொடுங்கள் என்று அவர்கள் கேட்டார்களா இலவசம் கொடுங்கள் என்று நீங்கள் கொடுத்தால் வாங்கத்தானே செய்வார்கள் அவர்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்று தெரியுமா அல்லது ஏன் கொடுக்கின்றீர்கள் என்று சிந்திக்க நேரம் இருக்கின்றதா? விவரமான பொது மக்கள் நீங்கள் கொடுக்கும் பணம் இலவசம் எல்லாம் எப்படி வந்தது யார் கொடுத்தது கொடுத்தவர் யார் என்ற விபரம் கேட்டல் தர மறுக்கின்றீர்களே

நீங்கள் செலவு செய்யும் பணம் நல்லவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதா அல்லது ஏமாற்றுக்காரர்களால் கொள்ளைக் காரர்களால் தீவிரவாதிகளால் நன்கொடையாகப் பெறப்பட்டதா என்று அறியும் உரிமை ஒட்டுப்ப்போட்ட மக்களுக்கு இல்லையா கேட்டால் தர முடியாது என்று சொல்கின்றீர்களே.

உச்ச நீதிமன்ற ஆணையை, மத்திய தகவல் ஆணைய உத்தரவை, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கொண்டு வரும் சட்டங்கள் என் எதுவும் கட்சிகளை கேள்வி கேட்டு கட்டுப்படுத்தக் கூடாது என்றால் நீங்கள் மக்கள் காவலரா மாபியா கும்பலா ? மக்களுக்காக கட்சியா கொள்ளைக்காக கட்சியா மக்களுக்காக ஆட்சியா கட்சிக்காக ஆட்சியா?

ஓட்டுப் போடா மக்கள் வேண்டும் ஆனால் அந்த மக்கள் கேட்கும் தகவல் இல்லை

ஒட்டு மட்டும் போடுங்கள் மற்றதைக் கேட்கக் கூடாது என்றால்


எதிர்க் கட்சிகள் பழிவாங்கப் பயன்படுத்தும் என்ற வாதம் செய்யும் கட்சிகளே தகவல் கேட்டால் கொடுத்துவிட்டால் எப்படி பலி வாங்க முடியும் தகவல் தானே கேட்கின்றார்கள் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே!. யோக்கியமானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக உள்ள உங்களை எப்படி பழிவாங்க முடியும் உங்கள் உள்கட்சி விவகாரம் வெளி வந்துவிடும்  என்றல் நீங்கள் நாட்டுக்காக உழைப்பவர்களா அல்லது உங்கள் கட்சிக்காக உளைப்பபவரா

கட்சியி ரகசியம் வெளிவந்துவிடும் என்று கூக்குரல் இடும் கட்சிகளே கட்சியில் ரகசியம் அவசியமா அப்படி என்ன ரகசியம் இருக்கும் வந்த நன்கொடைகள் அல்லது தவறுகள் தானே இருக்க முடியும்.

உங்கள் கட்சிக்கு எந்த பதிப்பும் வராது என்று நாங்கள் சொல்கின்றோம் அப்படி பாதிப்பு வரும் என்று சொல்லும் நீங்கள் அந்த பாதிப்புகளைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இனி வரும் தேர்தலில் ஒட்டு அளிக்கும் மக்கள் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே என்பதில் தீர்மானமாக இருக்கின்றார்கள் என்பதையும் மனதில் கொண்டு வாதம் செய்யுங்கள்

தகவல் சட்டத்தில் தகவல் கேட்டால் தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஒட்டு

தகவல் சட்டத்திற்குள் வரமாட்டேன் எங்கே ஒடுகின்றீர்கள் ஏன் ஒடுகின்றீர்கள் எதற்க்காக ஒடுகின்றீர்கள் அரசியல் கட்சிகளே எல்லாம் மக்களுக்கு தெரியும்

இலவசமாக இனி நீங்கள் எது கொடுத்தாலும் எதற்கு இலவசம் தருகின்றீர்கள் என்பது முதல் அதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதுவரை  மக்கள் RTI மூலம் கேட்பார்கள். 

புதன், 3 ஜூலை, 2013

அமைப்புகள் வெவ்வேறு ஆயினும் இலக்கு ஒன்றே ஊழலை ஒழிப்போம் RTI சட்டம் காப்போம் .

சமூக ஆர்வலர்களே ,   சமூக அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளே உங்கள் ஆதரவுடன் 13-7-2013 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர மறுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளைக் காப்பாற்றும் நோக்குடன் இந்த சட்டத்தையே திருத்தம் கொண்டுவந்து முடக்க முயலும் மத்திய அரசினைக் கண்டித்து அனைத்து பொதுமக்களின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம் கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

அமைப்புகள் வெவ்வேறு ஆயினும் இலக்கு ஒன்றே ஊழலை ஒழிப்போம் RTI சட்டம் காப்போம் . 
SMS , E-Mail, மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் உங்கள் நண்பர்களுக்கும்  சார்ந்தவர்களுக்கும் உங்கள் பகுதி மக்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் கலந்துகொள்ள உதவிடுங்கள்

திங்கள், 1 ஜூலை, 2013

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கம் என்பதில்லையே!


வஞ்சத்தால்  பிரித்தான் வெள்ளையன் 
சாதி மதமென்று  பிரித்தான் கொள்ளையன்
குரோதத்தை வளர்த்தான் ஆளவந்தான்
ஊழலால் ஆள்கின்றான் கொள்ளையன்
பிச்சைக்காக வரிசையில் மாக்கள்!


அச்சமில்லை அச்சமில்லை என்றான் பாரதி
நமக்கோ வெட்கமில்லை வெட்கமில்லை
வெட்கம் என்பதில்லையே!
வீட்டில் எல்லாம்  இருப்பினும் பிச்சை கேட்க
வெட்கம் என்பதில்லையே!

அமைப்புகள் வெவ்வேறாயினும்
மதங்கள் வெவ்வேறாயினும்
சாதிகள் வெவ்வேறாயினும்
நம் இலக்கு ஒன்றே
RTI சட்டம் காப்போம்
ஊழலை ஒழிப்போம்
வாரீர் வாரீர்!

13-7-2013 அன்று காலை 10 மணிக்கு   ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும். 

இரத்தின சாமிகிட்டப்பா அவர்களுக்கு பதிலுரை

நண்பர்களே நான்  பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்ப்பதில்லை எப்போதாவது பார்த்தால் நிறைய செய்திகள் இருக்கும் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய செய்திகளுக்கு தாமதம் ஆனாலும் பதில் எழுதுவது வழக்கம் அந்த வகையில் இரத்தின சாமிகிட்டப்பா அவர்களுக்கு நாங்கள் மறுமொழி இட்டதை அப்படியே உங்களுக்கும் தரலாம் என்று எண்ணம் அகவே இந்தப் பதிவு

ஞாயிறு, 30 ஜூன், 2013

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கள் கிழமை தோறும்

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் 17-6-2013 அன்று முதல் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை தோறும் இந்தியன் குரல் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவது நடத்திட ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம்.

சனி, 29 ஜூன், 2013

ஆனாலும் ஊழல் நன்றாக நடந்தது.

மாவட்ட தலைநகரம், மாநில தலைநகரம் கட்சி அலுவலகம் இலவச இடம் கட்டிடம் வரிவிலக்கு மின் கட்டண சலுகை, தேர்தல் நேரங்களில் தொலைகாட்சி மற்றும் பாது காப்பு இலவச தொலைபேசி இணையதள வசதியுடன் உள்ளிட்ட அரசின் பல சலுகைகள் அரசியல் கட்சிகளுக்கு உண்டு.

தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் அரசியல் கட்சிகள் தகவல் அளிக்க வேண்டும் -மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.

 அரசியல் கட்சிகள் RTI சட்டத்தில் இருந்து விலக்களிக்க பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் - பிரதமர் மன்மோகன் சிங்

எந்த ஒரு அரசியல் கட்சியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தரவில்லை ஆனால் ஒப்படைக்கப்பட்டது
2 ஜி அலைக் கற்றை , காமல் வெல்த் , கார்கில் அடுக்குமாடி, நிலக்கரி சுரங்கம் ஊழல் போன்று அனைத்து ஊழலும் செய்வோம் அளவுக்கு அதிகமான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து வைப்போம் அடுத்து வரும் தேர்தலில் மக்களுக்கு இலவசம் கொடுக்க வேண்ண்டும் என்பதற்காக மக்களே உங்களுக்காக கொள்ளையடிப்போம் ஊழல் செய்வோம் என்று வாக்குறுதி தரவில்லை.
 ஆனாலும் ஊழல் நன்றாக நடந்தது. ஆனால் எல்லா ஊழலும் தகவல் உரிமைச் சட்டத்தால் வெளிவந்து விட்டது.
விலைவாசிகளை உயர்த்துவோம் மின் கட்டணங்களை உயர்த்துவோம் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்துவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை.
 ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக நடந்த காரணத்தால் என்ன வாக்குறுதி அளித்தீர்கள் அதில் எத்தனை நிறைவேற்றினீர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்ன அதற்காக என்ன தீர்மானங்கள் உங்கள் கட்சியில் நிறைவேற்றியுள்ளீர்கள் அத தீர்மானங்களின் நகளினைக் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள்.
 உங்களது கட்சி மினிட்ஸ் புத்தகத்தில் அந்த தீர்மானங்கள் உள்ள பக்கங்களின் நகல் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள். கொடுக்கவில்லையே  மூன்று ஆண்டுகள் போராடியும் தர மறுத்ததால் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட 13 முன்னாள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உத்தரவு வழங்கியுள்ளது. அப்படியும் தரவில்லையே


ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்சியும் அவர்கள் வெளிநாட்டின் கைக் கூலிகள் அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, உல்பா தீவிரவாதி நெருக்கமானவர்கள் அந்தக் கட்சிக்கு பணம் தருகின்றார்கள் என்ற தகவல்களை கேட்டு பொது மக்களாகிய நாங்கள் கவலை கொள்கின்றோம். ஓட்டுப் போட மக்களுக்கு பணம் செலவு செய்கின்றோம் அதனால் நாங்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பதும் எங்களுக்கு பயமாக உள்ளது ஆகவே உங்கள் கட்சியி யோக்கியதையை தெரிந்து கொள்வது அவசியம் ஆகின்றது .

மக்கள் ஆட்சி ஜனநாயக ஆட்சி நடத்தி மக்களுக்கு சேவைசெய்யும் கட்சி என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியை அப்படித்தான் நடத்துகின்றீர்களா உங்களது கட்சி வேட்பாளர் தேர்வு நியாயமாக நேர்மையாக நடத்தப் படுகின்றதா அதற்கு மேலாக உங்கள் கட்சி அல்லாத யாரேனும் பணம் கொடுத்து வேட்பாளர் தேர்வில் வெற்றி பெருகின்றாரா என்ற விபரம் தானே கேட்கின்றோம் தரவே இல்லையே

மக்கள் ஓட்டுப் போட ஓட்டுக்கு பணம் கேட்கின்றார்கள் என்று மக்கள் மேல் பலி போடுகின்றீர்களே. உங்கள் தவறுக்கு மக்களையும் கூட்டாளியாக்க முயன்று அதில் வெற்றி போன்ற மாயத்தை செய்யும் தந்திரத்தால் எமாற்றுகின்றீர்களே. அவர்கள் கேட்டார்களா ஓட்டுக்கு பணம் கொடுங்கள் என்று அவர்கள் கேட்டார்களா இலவசம் கொடுங்கள் என்று நீங்கள் கொடுத்தால் வாங்கத்தானே செய்வார்கள் அவர்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்று தெரியுமா அல்லது ஏன் கொடுக்கின்றீர்கள் என்று சிந்திக்க நேரம் இருக்கின்றதா? விவரமான பொது மக்கள் நீங்கள் கொடுக்கும் பணம் இலவசம் எல்லாம் எப்படி வந்தது யார் கொடுத்தது கொடுத்தவர் யார் என்ற விபரம் கேட்டல் தர மறுக்கின்றீர்களே

நீங்கள் செலவு செய்யும் பணம் நல்லவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதா அல்லது ஏமாற்றுக்காரர்களால் கொள்ளைக் காரர்களால் தீவிரவாதிகளால் நன்கொடையாகப் பெறப்பட்டதா என்று அறியும் உரிமை ஒட்டுப்ப்போட்ட மக்களுக்கு இல்லையா கேட்டால் தர முடியாது என்று சொல்கின்றீர்களே.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கொண்டு வரும் சட்டங்கள் எல்லாம் அனைத்துக் குடிமக்களுக்கும் பொது இல்லையா? எல்லா சட்டங்களையும் மக்கள் மதிக்க வேண்டும் எங்களை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதன் நோக்கம் என்ன ?

ஓட்டுப் போடா மக்கள் வேண்டும் ஆனால் அந்த மக்கள் கேட்கும் தகவல் இல்லை

ஒட்டு மட்டும் போடுங்கள் மற்றதைக் கேட்கக் கூடாது என்றால்


எதிர்க் கட்சிகள் பழிவாங்கப் பயன்படுத்தும் என்ற வாதம் செய்யும் கட்சிகளே தகவல் கேட்டால் கொடுத்துவிட்டால் எப்படி பலி வாங்க முடியும் தகவல் தானே கேட்கின்றார்கள் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே!. யோக்கியமானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக உள்ள உங்களை எப்படி பழிவாங்க முடியும் உங்கள் உள்கட்சி விவகாரம் வெளி வந்துவிடும்  என்றல் நீங்கள் நாட்டுக்காக உழைப்பவர்களா அல்லது உங்கள் கட்சிக்காக உளைப்பபவரா

கட்சியி ரகசியம் வெளிவந்துவிடும் என்று கூக்குரல் இடும் கட்சிகளே கட்சியில் ரகசியம் அவசியமா அப்படி என்ன ரகசியம் இருக்கும் வந்த நன்கொடைகள் அல்லது தவறுகள் தானே இருக்க முடியும்.

உங்கள் கட்சிக்கு எந்த பதிப்பும் வராது என்று நாங்கள் சொல்கின்றோம் அப்படி பாதிப்பு வரும் என்று சொல்லும் நீங்கள் அந்த பாதிப்புகளைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இனி வரும் தேர்தலில் ஒட்டு அளிக்கும் மக்கள் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே என்பதில் தீர்மானமாக இருக்கின்றார்கள் என்பதையும் மனதில் கொண்டு வாதம் செய்யுங்கள்

தகவல் சட்டத்தில் தகவல் கேட்டால் தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஒட்டு

தகவல் சட்டத்திற்குள் வரமாட்டேன் எங்கே ஒடுகின்றீர்கள் ஏன் ஒடுகின்றீர்கள் எதற்க்காக ஒடுகின்றீர்கள் அரசியல் கட்சிகளே எல்லாம் மக்களுக்கு தெரியும்

இலவசமாக இனி நீங்கள் எது கொடுத்தாலும் எதற்கு இலவசம் தருகின்றீர்கள் என்பது முதல் அதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதுவரை  மக்கள் RTI மூலம் கேட்பார்கள். 

ஒரு பேருந்தை பாதுகாப்புடன் ஓட்டிச் செல்ல ஒரு ஓட்டுனரை நியமித்து இருக்கின்றோம். அவர் நல்ல ஓட்டுனர் என்று நம்பித்தான் 60 பயணிகளும் பேருந்து பயணம் செய்கின்றார்கள். அந்த ஓட்டுநர் வண்டியில் உட்கார்ந்தவுடன் அவர் இஷ்டத்திற்கு வண்டியை ஓட்டி செல்வது மட்டும் இல்லாமல் நான் அப்படித்தான் ஓட்டுவேன் உங்கள் வேலை வண்டியில் ஏறி உட்காருவது என்னுடைய வேலை வண்டியை ஓட்டுவது இப்படித்தான் ஓட்டுவேன் என்று தாறுமாறாக ஓட்டிச் சென்றால் அந்த ஓட்டுனரை நீக்குவதா வேண்டாமா நீங்களே முடிவு எடுங்கள்.

அவர் இஷ்டத்திற்கு வண்டியை ஓட்டி செல்வது மட்டும் இல்லாமல் நான் அப்படித்தான் ஓட்டுவேன் உங்கள் வேலை வண்டியில் ஏறி உட்காருவது என்னுடைய வேலை வண்டியை ஓட்டுவது இப்படித்தான் ஓட்டுவேன்



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்போம் என்று வாக்குறுதி தரவில்லை ஆனால் ஒப்படைக்கப்பட்டது

வெள்ளி, 28 ஜூன், 2013

இந்தியன் குரல் பயிற்சி கூட்டங்கள்

சென்னை 29-6-23013கும்பத் காம்ப்ளெக்ஸ் சென்னை 3 9444305581

சென்னை கல்விக்கடன்  1-7-2013 கும்பத் காம்ப்ளெக்ஸ்

திருப்பூர் 6-7-2013
பு வே கோபால்

தகவல் உரிமைச் சட்ட உதவி மையம்

பிரதி மாதம் 1,15 சென்னை கும்பத் காம்ப்ளெக்ஸ்
பிரதி வாரம்  ஞாயிறு கிழமைகளில் திரு வி க நகர் சென்னை 11
பிரதி வாரம்  திங்கள் கிழமை திருவொற்றியூர் சென்னை 19
பிரதி வாரம் வியாழக் கிழமைகள் ராஜ தியேட்டர் பின்புறம் வேலூர்
பிரதி வாரம் சனிக்கிழமை பீளமேடு கோவை
பிரதி மாதம் முதல் ஞாயிறு மதுரை
பிரதி மதம் இரண்டாம் ஞாயிறு தேனீ
அனைத்து வேலை நாட்கள் காஞ்சிபுரம்
அனைத்து வேலை நாட்கள் திருப்பத்தூர்
அனைத்து வேலை நாட்கள் திருச்சி
அனைத்து  வேலை நாட்கள் குருவலூர் செஞ்சி தாலுகா விழுப்புரம் துறை  9486237264

புதன், 26 ஜூன், 2013

சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்

உண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக்க முடியாது என்று நான் சவால் விடுகின்றேன். உறுதியாய் சொல்கின்றேன் முடியாது.

உங்கள் நெஞ்சில் கைவைத்து உண்மையை சொல்லுங்கள்.
 உங்கள் பிள்ளைகள் படிப்பதை சந்தோசமாக ஏற்று மகிழ்ச்சியுடன் தான் படிக்கின்றார்களா? வீட்டுப் படம் சந்தோசமாக செய்கின்றார்களா? 
 பல மாணவர்கள் மன அழுத்தத்துடன் மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டிய நிலை இருக்கின்றதா இல்லையா?
இதற்கு கரணம் என்ன? என்றாவது நம் சிந்தனை செய்தோமா ?

திங்கள், 24 ஜூன், 2013

கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ , யாரை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் தர தயாராக இல்லை.

உயர்கல்வி பயில விரும்பும் மாணவனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை என்ற நிலை இல்லாமல் ஆக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட உன்னத திட்டம் கல்விக் கடன் திட்டம். 

நாமளும் அரசியல் கட்சி நடத்தலாம்!? அரசியல் இயக்கம் அரசின் சலுகைகள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டால் ஏன் தரவேண்டும் என்பதற்கு மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பில் விளக்கம

சனி, 22 ஜூன், 2013

மின் கட்டண உயர்வு அறிவிப்பு

இந்தியன் குரல் கூறியது போன்றே மின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்துவிட்டது தினமலரில் செய்தி அதை அப்படிடியே கீழே கொடுத்துள்ளோம். என்ன சூட்சுமம் இருக்கின்றதோ அதை வெளியிடாமல் நல்லதுபோன்ற தோற்றமளிக்கும் செய்தியை மட்டும் வெளியிட்டுள்ளது அனால் அடுத்து வரும் ஆபத்த்தான மின்கட்டண உயர்வு பற்றிய ஆணையத்தின் முடிவை எந்த ஊடகமும் வெளியிடவே இல்லை.அவர்களுக்கு தெரியவில்லையா அல்லது கொடுக்கும் செய்தியை மட்டும் போடும் திறமையா? இப்படிப்பட்ட  ஊடகங்களின், அரசின் செயல்களை மக்கள் நம்பிக்கொண்டு தான் இருக்கின்றார்களா? தெரியாமல் அல்லது தெரிந்தே மௌன சாமியார்களாக இருக்கின்றார்களா?

வியாழன், 20 ஜூன், 2013

ஒரு குழந்தை தாயானது! திடங்கொண்டு போராடு "காதல் கடிதம்"

வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கணினி முன் அமர்ந்தான் ரவி. சூடாக பாலை கொண்டு வந்து கொடுத்தாள் அவன் அம்மா. திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் மகனைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த போது, அம்மா இங்கே வாயேன் என்று கையைப் பிடித்து இழுத்தான் ரவி.

செவ்வாய், 18 ஜூன், 2013

கல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தில் தீர்வு

கல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தில் தீர்வு 

வங்கிகள் விண்ணப்பம் தர மறுத்தால்? 
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வாங்க மறுத்தால்? 
இந்த மதிப்பெண்ணுக்கு கடன் வழங்க இயலாது என்றால்? 
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கடன் இல்லை என்றால்? 

அம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந்திக்க தோன்றினாலும் இன்றைய இளம் சமுதாயம் வளர அவர்களுக்கு ஏற்ற சுற்றுப்புறம் அமைந்திட்ட உலகம் இருப்பதாக தெரியவில்லை. முன்னோர்கள் வகுத்தளித்த நல்ல ஒழுக்க நெறிகள் பற்றிய விழிப்பு இல்லாத நிலைதான் உள்ளது எனலாம். பண்பில்லா நிலை, சுயநலம், மனிதாபிமானம் அற்ற நிலை, யார் எப்படி ஆனாலும் எனக்கு கவலையில்லை என்ற நிலை, கொலை கொள்ளை பெருக்கம், பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை என்ற காரணிகளையும் அதன் போக்கையும் ஆராய்ந்து அறிவது நம் கடமை. 

திங்கள், 17 ஜூன், 2013

அம்மாக்களே எச்சரிக்கை ! நீதி கேட்ட தாயின் அறைகூவல்:

அம்மாக்களே!
இந்தியாவில் உங்களுக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் யாருக்கும் பாதுகாப்பில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடுதான், தினசரி பெண்கள் பாலியல் தொல்லைக்கு பலியாவது.  உங்களின் உங்கள் பிள்ளைகளின் எச்சரிக்கையும் அறிவும் ஆற்றலுமே பாதுகாப்பு , எச்சரிக்கையுடன் இருப்பீர்!.

சனி, 15 ஜூன், 2013

பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம்

மதுரையில் பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

வெள்ளி, 14 ஜூன், 2013

2014 அம ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்கள் வாக்கு யாருக்கு !!!!


தவறு செய்யும் அரசியல் வாதிகளை திருந்தச் செய்வோம் திருந்தாதவர்களை  வருந்தச் செய்வோம் .


2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கின்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களது கொள்கைகளை சுருக்கி தங்கள் கட்சியின் கொள்கைக் கூட்டணிக்கு பதிலாக கொள்ளைக் கூட்டணிக்கு தயராகி வருகின்றன. கூட்டணி வைக்க தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கட்சியும் கட்சியரசியல் கைகளை நீட்டி வருகின்றது. 

வியாழன், 13 ஜூன், 2013

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் அரசு மதுக் கடைகளை நடத்தக் கூடாது என்ற போராட்டங்கள் நடந்து வருவது மக்கள் விழிப்புணர்வைக் காட்டுகின்றது. மதுவே நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றது. குற்றம் செய்தவன் குடிபோதையில் செய்துவிட்டான் என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது வெட்கக் கேடானது. காவல் துறையினரே குடிகாரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் என்னவென்று சொல்வது?


கடந்த  சில தினங்களுக்கு முன் திருவொற்றியூரில் நடந்த உண்மைச் சம்பவம் ;

செவ்வாய், 11 ஜூன், 2013

மும்பை சிவப்பு விளக்கு பகுதி பெண் ஸ்வேதா!!! கைகொடுக்கும் அமேரிக்கா உதவாத இந்தியா

  அமேரிக்கா முன்னேரியதர்க்கும் இந்தியா வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருப்பதற்கும் காரணம்.
 நல்லது செய்யும் நேர்மையாய் இருக்கும் உண்மையை பேசும் உதவும் மனிதர்களை இந்திய மக்கள் மதிப்பதில்லை!. அமேரிக்க அதிபராக இருந்தாலும் பொய் பேசினால், தவறு செய்தால், உதவிசெய்ய மறுத்தால் அமெரிக்கர்கள் மதிப்பதில்லை!.
அவமானப் படவேண்டிய இந்தியர்கள் ஆனந்தத்தில்.

‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’

எழுத மறந்த காதல் கடிதம்


நேர்மை நிறைந்த நடுவர்களே அருமைப்  பெரியோர்களே! அருமைத் தாய்மார்களே! அன்புக் குழந்தைகளே! அனைவருக்கும் என் பணிவான வணக்கம்   காதல் கடிதம் எழுதும் போட்டியில் நானும் பங்குபெறுவது பரிசுக்காக அல்ல அதன் ரகசியம் அப்புறமா  சொல்வேன்