ஆதரவாளர்கள்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை எண்ணூர் அசோக் லேலட் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் திரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் . அந்நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் துணை செயலாளராக பணியாற்றியவர் 1989 ஆம் ஆண்டு பனி ஓய்வு பெற்றார்

வடசென்னை திருவொற்றியூர் மார்கெட்டில் பிரச்சாரம் 

செ தமிழ்ச்செல்வன் அவர்கள் 12 மணி கொளுத்தும் வெயிலும்

மார்கெட்டில் வரும் அனைஇவருக்கும் விழிப்புணர்வு

ஓய்வு பெற்றதும்  மக்கள் விழிப்புணர்வுக்காக அம்பேத்கர் சமூக நீதி இயக்கம் எனும் அமைப்பினை நிறுவி சமூக நல்லிணத்துக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 26 ஆண்டுகளாக தொய்வின்றி செய்து வருகின்றார்

தனக்கு கிடைக்கும் மாத ஓய்வு ஊதியம் அவரது தேவைக்கு போக மீதி உள்ள முழுவதையும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக செலவிடுகின்றார்
வடசென்னை முதல் மீஞ்சூர் வரை இவரது மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகின்றது.

இவர் குடியிருந்த தெருக்கள் மேடு பள்ளமாக புதர் மண்டி பாம்புகளும் பூச்சிகளும் வாழும் இடமாக இருந்தது . தகவல் சட்டம் மூலம் அந்த சாலை பராமரிப்பு குறித்தும் புதிய தார் சாலை அமைப்பது குறித்தும் மாநகராட்சியிடம் பல முறை மனு கொடுத்தான் நிவாரணம் இல்லை . தகவல் உரிமைச் சட்டம் மூலம் தான் அளித்த மனுக்கள் மீது நிர்வாகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை மாநகராட்சியிடம் கேட்டார் . உடனே மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று தெருக்களும் தார்சாலை போடப்பட்டுவிட்டது

அப்படிப்பட்ட தகவல் சட்டத்தை செல்லாமல் செய்ய அரசியல் கட்சிகள் முயல்வதைக் கேள்விப்பட்ட தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியன் குரலுடன் இணைந்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்


யார் எப்படி இருந்தால் நமக்கு என்ன என்று இல்லாமல் சமுதாயத்தில் வாழும் காலத்தில் நன்றிக்கடனாக இந்த சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உயரிய சேவை செய்துவரும் ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களின் 26 ஆண்டு சேவையைப் பாராட்டி மகிழ்கின்றது இந்தியன் குரல். நீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்த்து  எஸ் எம் எஸ் அனுப்பலாமே சே.தமிழ்ச்செல்வன்.8056201875

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் போற்றப்பட வேண்டியவர். மனதார வாழ்த்துவோம்

VOICE OF INDIAN சொன்னது…

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களே
அவரது தொடர்பு என்னில் நீங்கள் நேரடியாகவே வாழ்த்தலாமே அவரது ஆசி வாங்கலாமே நேரமிருந்தால்! முயற்சிக்கவும்