ஆதரவாளர்கள்

திங்கள், 7 அக்டோபர், 2013

ஊடகவியலாளர்களின் சுயமரியாதையைக் காக்க எழுக தோழர்களே!

நன்மக்களே
மதுரை மாநகராட்சியில் முறைகேட்டை வெளியிட்ட ஊடகவியலாளர் திரு ராமானுஜம் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இந்தியன் குரல் வன்மையாக கண்டிக்கின்றது.

இது தொடர்பான கண்டனத்தைப் பதிவு செய்து மாநில முதலமைச்சர் மற்றும் கவர்னருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது இந்தியன் குரல்

நாம் 1947 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டோம் ஆயினும் சில சம்பவங்கள் நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கின்றோமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது
மதுரை மாநகராட்சியில் மட்டுமல்ல நாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுத்தால் போதும் என்ன கேட்டாலும் செய்து தருவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கின்றதா இல்லை.
லஞ்ச வழக்கில் லஞ்சம் கொடுப்பவரும் குற்றவாளிகள் தான் என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவர இருக்கின்றது அச் சட்டம் பற்றிய கருத்துக் கேட்பை பாராளுமன்ற நிலைக்குழு நடத்திவருவதும் அக்கூட்டத்தில் வரும் முக்கியஸ்தர்கள் இச்சட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை காட்டுவதுடன் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை அப்படியிருக்க லஞ்சம் கொடுப்பவரும் குற்றவாளி என்பது சரியல்ல என்று வாதம் செய்யும் அளவுக்குத்தான் நம் தேசத்தில் லஞ்சம் வேரூன்றி இருக்கின்றது .
ஆக இப்படி ஒரு அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தவறாக தன்னுடைய பதவியை பயன்படுத்தும் அலுவலர்கள் செயல்பாடுகளை அரசுக்கும் மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியதும் கண்காணிக்க வேண்டியதும் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் கடமையாகும்.
மாண்புமிகு முதல்வர் இந்த விசயத்தில் தலையிட்டு ஊடக நண்பர்களைக் காக்கவேண்டும் என்று இந்தியன் குரல் கேட்டுக்கொள்கின்றது.
அரசு நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்து ஊழலற்ற ஆட்சியைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்தார்கள். கடந்த காலத்தில் ஊழலும் லஞ்சமுமே ஆட்சி மாற்றத்திற்கும் காரணமாகியுள்ளது.
மக்களாட்சியில் மக்களைக் காக்கவும் தவறை தட்டிக் கேட்கவும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை அவமதித்து ஊடகங்களை முடக்கும் செயலை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய தவறி சுட்டிக்காட்டிய நபர்களை குற்றவாளியாக்கும் செயல் கண்டனத்துக்கு உரியதாகும்.

உணமையைக் கண்டறிந்து வெளியிடும் அத்தைகைய ஊடக நண்பர்களுக்கு ஒரு பாதிப்பு எனும்போது பொதுமக்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யவேண்டும். அப்பொழுதுதான் மக்களாட்சியில் மகத்துவம் காக்கப்படும்.
ஊடகவியலாளர்கள் , ஊடகத் துறை நண்பர்களுக்கு ஏற்ப்படும் அச்சுறுத்தல்கள் இந்திய ஜனநாயகத்திற்கு கேடு. அவர்களின் முதுகெலும்பு உடையாமல் இருக்கும் வரைதான் தேசம் இருக்கும் ஆகவே மக்களாட்சியின் முதலாளிகளே ஊடக நண்பர்களுக்கு பாதிப்பு என்றாம் நாம் சும்மா இருக்கலாமா தவறை சுட்டிக் காட்டிட தயக்கமின்றி முன்வாருங்கள்
- இந்தியன் குரல்

தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
www.facebook.com/voiceofindianorg

VOICE OF INDIAN Trust
267 T.V.K.Nagar Perambur
Chennai 11


கருத்துகள் இல்லை: