ஆதரவாளர்கள்

சனி, 10 ஆகஸ்ட், 2013

84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா 9486172017 நீங்களும் வாழ்த்தலாமே

வணக்கம் நண்பர்களே மூத்த குடிமக்களுக்கு இந்த சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை போலும்
 எண்பத்து நான்கு வயது  கொண்ட காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா சாதனை



இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றார் காஞ்சிபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் நல சங்கம் எனும் அமைப்பை ஏற்ப்படுத்தி உதவி செய்து வருகின்றார்

காஞ்சிபுரம் மாவட்டம முழுதும் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான  மூத்த குடிமக்களுக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்க உதவி செய்துள்ளார். காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் தகவல் சட்ட  உதவி மையம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக நடத்துகின்றார்.

கடந்த பஞ்சாயத்து தேர்தலில் இவர்கள் அமைப்பு மூலம் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தி செலவில்லாமல் தேர்தலில் வெற்றிபெற்று தலைவராக்கப்பட்டுள்ளார் அதற்கு காரணம் இவர்களது சேவையின் மீது மக்கள் கொண்ட நன்மைதிப்பே ஆகும்.

தகவல் உரிமைச் சட்டம் 2005 இல் இருந்து  கட்சிகள் விலக்களிக்கும் பொருட்டு கொண்டுவரும் சட்டத்திருத்தத்தை கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 10-8-13 அன்று காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் காஞ்சிபுரம் , எனும் இடத்தில் மிகப் பெரிய அளவில் பொதுமக்களை திரட்டி   நடத்தியுள்ளார்கள்

84 வயதில் நாம் எப்படி இருப்போமோ தெரியாது ஆனால் முழு முயற்சி எடுத்து மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார் அவரது சேவையை  பாராட்டி வணங்குகின்றது இந்தியன் குரல்

நீங்களும் வாழ்த்தலாமே அவரது தொடர்பு எண்
திரு ஆர் முனுஸ்வாமி ; 09486172017 

Photo
84 years old Mr.R.Munuswamy sir was was conducted public awareness meeting at Gnadhi Road corner  Kanchipuram DT Tamilnadu


NO RTI ! NO VOTE ! DEMONSTRATION IN KANCHIPURAM
(18 photos) Click this link
   https://www.facebook.com/voiceofindianorg


கருத்துகள் இல்லை: