ஆதரவாளர்கள்

புதன், 14 ஆகஸ்ட், 2013

மாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்

நண்பர்களே இ மெயிலில் வந்த காடிதம் இது இதை அப்படியே உங்களுக்கும்


பெறுநர்
ஆசிரியர்

அன்புடையீர்,
வணக்கம்,
திருச்சி பொன்மலை அருகேயுள்ள மாவடி குளத்தில் தூர்வாரும் பணியை மேற்பார்வையிடச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ அவர்கள் தானும் 3 மணி நேரம் மண்வெட்டியைப் பிடித்து மண்வெட்டியதாகச் செய்தி.. இதனைப் படிக்கும்போதே மாவட்ட ஆட்சியரின் பொறுப்பான சமூக அக்கறை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுபோல அனைத்து அதிகாரிகளும் செயல்பட்டால் ஏழை பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு குறையும். இங்கே மாவட்ட ஆட்சியர் ஒரு விஷயத்தை மறந்துள்ளார். தன்னுடன் வந்த அதிகாரிகளையும் மண்வெட்டும் பணியை மேற்கொள்ள வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அவரை இமை காப்பதுபோல காக்கும் டபேதாரையும் இந்த மண்வெட்டும் பணியை மேற்கொள்ள வைத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மண்வெட்டியால் மண்ணை கொத்துவதை அவர் வேடிக்கை பார்ப்பதுபோல போட்டோ எடுக்கப்பட்டு செய்தித் தாட்களில் வெளியாகியுள்ளது வேதனை தருகிறது. I  A  S  பயிற்சியில் பிற அலுவலர்களை எப்படி வேலை வாங்க வேண்டுமென பயிற்சியளித்திருப்பார்களே!
தி ஆறுமுகம்
239 பெரிய தெரு,
திருநெல்வேலி-627006
கைபேசி:9843503990.

தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஒருமுறை இந்த இணைப்பில் சென்று பாருங்கள் http://www.voiceofindian.org/sign-petition-pm/

பசியெடுத்தால் உணவு உண்பதும் தூக்கம் வந்தால் தூங்குவதும் உணவுக்காக தேடி உழைப்பதும் காதல் செய்வதும் காலத்தில் இனப்பெருக்கம் செய்வது என்பது அனைத்து விலங்குகளும் செய்கின்றனவே.  நேரம் இல்லை என்று சொல்பவர்களும் நாகரீக மனிதன் என்று சொல்லிக்கொள்பவர்களும் இதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை

  படிப்பது, உழைப்பது , எல்லாம் உணவுக்காக(பொருளுக்காக , ஆடம்பர வாழ்க்கைக்காக குடும்பத்திற்காக ) என்றால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?

நீங்கள் மனிதனா? மிருகமா? மனிதனென்றால் இந்த இணைப்பை சொடிக்கி சிந்திக்கும் மனிதன் என்பதை பதிவு செய்யுங்கள்
 http://www.voiceofindian.org/sign-petition-pm/



கருத்துகள் இல்லை: