ஆதரவாளர்கள்

ஞாயிறு, 10 மார்ச், 2013

நம் பிள்ளைகள் ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்

எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது
அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்?
 எங்களுக்கு புரியவில்லை 
நான் சொல்வது நம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்துவிட்டால்    
நம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே!
என்ன புரியவில்லையா?
மீன் பிடித்து தரவேண்டாம்  மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்கிறேன்
இன்னும் புரியவில்லையா?
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு  வழி செல்லித்தரலாமே! 
எப்படி என்று  கேட்கிறீர்களா?
ஒரு இந்திய  குடிமகன் தனக்கு தேவையான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர் மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை இலஞ்சம் கொடுக்காமல் அடைய வழிகாட்டுவது.
 நம் ஊருக்கு தேவையான தெருவிளக்கு, சாலைவசதி,மருத்துவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி பெறுவது, தங்கள் பகுதி குறைகளை  யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.
நம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
சீசன் தேவைகள் குறிப்பாக கல்விக்கடன் போன்று அந்த அந்த நேரங்களின் தேவைக்கு பலன் பெறுவது எப்படி என்று சொல்லித்தருவது.
 இன்றைய இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும்  மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், போராடியும் தோற்ப்பார்கள்  தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும் துணிந்துவிடுவர். சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே விழித்துக் கொள்வோம் 
நாம்    செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள் 
உடனடியாக செயல்படுவோம்.
இத தாங்க நம்ம இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய www .vitrustu ,blogspot .com  எனும் வலைப் பூவில்  தொடருங்கள்  -- 
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar, 
Sembiyam,
Perambur,
Chennai 600019

கருத்துகள் இல்லை: