ஆதரவாளர்கள்

சனி, 16 மார்ச், 2013

இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 1

1840 ஆம் ஆடுகளில் வெள்ளையர்கள் வணிகம் மூலம் இந்திய மண்ணில் பலமான கால் பதித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் இந்திய மக்கள்
செல்வச் செழிப்புடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ஆங்கிலேயர்கள்
சரிய சமஸ்தான மன்னர்களை  அடிமைகளாக்கி ஆட்சிமுறையை மாற்றி அவர்களது வியாபாரம் பெருகவும் இந்திய திருநாட்டின் செல்வங்களைக் கொள்ளை அடிக்கவும் திட்டமிட்டார்கள் அவர்களுக்கு அது  குதிரைக் கொம்பாகவே இருந்தது. இங்கிலாந்து ராணி பாராளுமன்றத்திலே இந்த பிரச்னைக்கு தீர்வு வேண்டுமென்ற நோக்கத்தில் விவாதித்து அதற்கு ஜான் மெக்காலே தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார்கள். 1856 ஆம் ஆண்டுவரை அந்த கமிட்டி உறுப்பினர்கள் மெக்காலே தலைமையில் இந்தியா முல்குவதும் சுற்றுப்பயணம் செய்தார்கள். தமிழகம் வந்தபொழுது மதுரை அருகே சாமானாயக்கன் ஜாமீன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வையிட்டு மக்களிடம் பேசி வரும்போது தை மாதமாகையால் மக்கள் நெல் வயலில் கதிர் அறுப்பதும் களத்திலே நெல்மணிகளைக் கயவைப்பதும் என்று சுறுசுறுப்பாக இருக்கின்றார்கள்.அப்பொழுது நெல் காய்ந்துகொண்டு இருக்கும் களம் அருகில் இருந்த தம்பை அம்மாள் எனும் மூதாட்டியிடம் தமிழ் தெரிந்த ஆங்கிலேயன் உதவியாடு உரையாடிக் கொண்டிருக்கும் போது களத்திலே குருவிகள் நெல்மணிகளைக் கொத்தித் தின்ன வந்து அமர்ந்தது .அப்பொழுது அந்த மூதாட்டி தன காதிலிருந்த தங்கத்திலான தொங்கட்டானை கலட்டி வீசி குருவியை விரட்டினார் . அதைப் பார்த்த ஆங்கிலேயன் இவ்வளவு செல்வா வளமா பயத்தினால் உடனே அங்கிருந்து சென்றுவிட்டான். இதுகுறித்து அவன் துறையிடம் சொன்னதும் அந்த துறைக்கு உடனே அந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த ஊரின் பெயர் இரும்பை முறிக்கும் சாமானாயக்கன் ஜாமீன் என்று தெரிந்ததும் அந்த ஊரைப் பற்றியும் அதென்ன இரும்பை முறிக்கும் சாமானாயக்கனுர் அதை நானே நெறி சென்று பார்க்க வேண்டும் அந்த ஜமீந்தாரருக்கு நான் வருகின்றேன் என்று  தகவல் சொல்லிவிடுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே தகவல் சொல்லவும் சாமானாயக்கருக்கு ஒரு சந்தேகம் இந்த ஆங்கிலேயன் பேராசை  பிடித்தவன் ஊருக்குள் விட்டால் ஆபத்து நம் செல்வங்களைக் கொள்ளை அடித்துவிடுவான் என்ன செய்வது என்று ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி துறை வரும் நாள் வந்தது துறை மற்ற பரிவாரங்களுடன் குதிரையில்  வழிதெரியாமல் யோசனையாக யாரிடம் கேட்கலாம் என்று பார்த்துகொண்டு வரும்பொழுது மாடு மேய்க்கும் பெரியவர் மாடு மேய்த்துக்கொண்டு இருப்பது கண்டு ஐயா பெரியவரே இந்த சாமானாயக்கன் ஜமீனுக்கு எப்பாடு போகவேண்டும் நாங்கள் வந்த பாதை சரியானது தானா என்று கேட்டார்கள். அந்த பெரியவர் தனது தலையில் கட்டியிருந்த உருமாலை கொஞ்சம் தூக்கி பிடித்து நீங்கள் எல்லாம் யாரு எங்கிருந்து வருகின்றீர்கள் என்ன காரணமாய் வந்தீர்கள் என்று சொன்னால் நான் சொல்லுகின்றேன் என்று கூறினார். குதிரையில் வந்த ஒரு நபர் அந்த பெரியவரைப் பார்த்து பெரியவரே இரும்பை முறிக்கும் சாமானயக்கன் ஜமீந்தார் இரும்பை முறிக்கும் வல்லமை படித்தவராம் அவரை நாங்கள் பார்த்து எப்படி இரும்பை முறிக்கின்றார் என்று பார்க்கவே வந்தோம் என்றார். சரி எங்கள் ஜமீந்தார் எப்பவும் வேலையாக இருப்பார் அவரிடம் இதற்காக வந்தோம் எற்று சொன்னால் வேலையைக் கெடுக்க வந்தீரா என்று கோபம் கொண்டு உங்களை தண்டிக்க வாய்ப்புள்ளது இந்த ஜாமீன் மக்கள் எல்லோருமே வீரம் மிக்கவர்கள் தான் நீங்கள் எந்த இரும்பை முறிக்க வேண்டும் என்று என்னுகிரிரோ அதை என்னிடம் கொடுங்கள் நான் முறித்து காட்டுகின்றேன் முடியாவிட்டால் நீங்கள் என்னிவன்தது போலவே ஜமீனைப் பார்க்கலாம் என்றார். அப்படியா சரி என்று கொண்டுவந்த கடப்பாரையில் ஒண்டை பெரியவரிடம் வெள்ளையன் கொடுத்தான். கடப்பாறையைப் பெற்ற பெரியவர் வாங்கிய வேகத்திலேயே இரண்டுதுண்டாய் உடைத்து போட்டார். வேல்லைக்கரதுரைக்கு ஒரே ஆச்சரியம் மாடுமேய்க்கும் இந்த கிழவனே இவ்வளவு வலுவுடன் இருந்தால் இந்த ஜமீந்தார் எவ்வளவு வலுவோடு இருப்பார் நாம் அவ்விடம் சென்றால் ஆபத்து நாம் வந்த வழியே திரும்பிட வேண்டும் என்று தன்னிடம் சேர்ந்தார். அன்று மாலை சமீந்தார் வந்த ஆபத்து நீங்கியது என்று சொல்லவும் தல்லாளி கேட்டார் எப்படி ஐயா அவர்கள் வருகிறேன் என்று சொல்லி வராமல் இருக்கிறார்கள் நீங்களோ ஆபத்து நீங்கியத்கு என்கிறீரே எப்படி எற்று கேட்டார். நான் மாடு மேய்ப்பவராக  வேடமிட்டு வழியில் மாடு மேய்த்து கொண்டு இருந்ததையும் நடந்ததையும் சொல்லி இனி நம் குடிகள் அச்சப்பட வேண்டாம் என்று நம்பிக்கையூட்டினார். அதே நேரம் வெள்ளைக்கார துறை உயிர் தப்பினோம் என்று சொல்லிக்கொண்டு அவனது அரண்மனை செல்ல மெக்காலே நடந்த விபரத்தைக் கேட்டு இப்படி வீரமுள்ள மக்களா என்று வியந்து தன பயணத்தை தொடர்ந்தான். ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது அனைத்து மக்களும் செல்வச் செழிப்புடன் கவலையின்றி வாழ்வதைக் கண்டான் கூடவே இன்னொன்றையும் கண்டான் ...............அது தான் இந்தியர்களின் 

10 கருத்துகள்:

Robin சொன்னது…

//1840 ஆம் ஆடுகளில் வெள்ளையர்கள் வணிகம் மூலம் இந்திய மண்ணில் பலமான கால் பதித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் இந்திய மக்கள்
செல்வச் செழிப்புடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். // ஆரம்பமே பொய்!

Massy spl France. சொன்னது…

ஆங்கிலேயர்கள் உண்மையாகவே இந்தியாவையும் இந்தியர்களையும் அடிமையாக வைத்து ஆண்டார்கள் என எழுதுவது அறியாமையின் வெளிப்பாடே. இந்தியா என்கிற இல்லாத ஒரு பெரிய நாட்டை அக்காலத்தில் உருவாக்கி கொடுத்ததே ஆங்கிலேயர்கள்தான். ஆங்கிலேயர்கள் பொதுவாக மனிதர்களை மதிப்பவர்கள். கலை கலாச்சாரங்களை மதிப்பவர்கள்.

'சுரண்டல்' என்கிற வார்த்தையை பல விதமாக உபயோகப்படுத்தலாம். பல கண்டங்களிலும் மண்ணை பிடித்து காலனி ஆதிக்கம் நடத்தேற்றிய ஆங்கில் பேரரசு தங்கள் தாய் நாட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை எடுத்து சென்றது உண்மையே.

சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றைய தேதி வரைக்கும் இந்தியாவில் உள்ள ஆதிக்க மத, சாதி சாதியினர் உதவியோடு ஈன அரசியல்வாதிகள் துணையோடு பசி பட்டினியில் வாடும் ஏழை மக்களுக்கு உரிமையான இயற்கையாக கிடைக்க வேண்டிய அனைத்து வளங்களையும் வலைத்து பகிரங்கமாக 'சுரண்டி' "ஏற்றுமதி" என்கிற பித்தலாட்டத்தின் மறைவில் அந்நிய நாடுகளுக்கு விற்று உடல் பெறுக்கும் மானங்கெட்ட முதலைகள் இன்று 'சுரண்டல்' என்கிற அந்த அவமான செயலைத்தான் செய்து வருகின்றனர்.

இன்றும் முற்போக்கு சமூகமான தமிழ்நாட்டில் கூட 'தீண்டாமை' எனும் கொடிய சமூக நோய் ஒழிந்த பாடில்லை. இதற்காகத்தான் அன்று தந்தை பெரியார் சொன்னார் சுதந்திரம் வேண்டாம் என்று. வெள்ளையன் போய் இன்று கொள்ளையனும் கொலைகார்களும் நாட்டை நாட்டு மக்களை சுரண்டி உடல் பெருக்கின்றனர்.

காந்தி போன்ற போலிகள் தங்கள் உயர் சாதி ஆதிக்க வெறி காரணமாகத்தான் ஆட்சி அதிகாரத்திற்கு ஆங்கிலேயர்களுடன் பொறாமை உணர்ச்சியுடன் போட்டி போட்டு சண்டைகளை வளர்த்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமையாக வைத்திருக்கின்றனர் என்கிற மாய பூதத்தை உலாவவிட்டு இதன் ஊடே அனைத்திந்திய விடுதலை தாகம் என்கிற சூன்யத்தை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கினர். படிப்பறிவு இல்லாத மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

சண்டைகள் இல்லாமல் எந்த சச்சரவும் இல்லாமல் மாபெரும் இந்தியாவை அளும் சகல தகுதி தமக்கு உண்டென நிரூபனம் செய்து காட்டியிருந்தால் இன்று 'அடிமை, சுதந்திரம்' என்கிற வார்த்தைகளுக்கு இடமே இருந்திருக்காது. உலகத்தைய ஆண்ட ஆட்டிப்படைத்த ஆங்கிலேயர்களுக்கு காந்தி நேரு போன்ற காலனா அறிவாளிகள் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாததே 'சுதந்திரம்' தாமதானதற்கு காரணம்.

இம்மாபெரும் நாட்டை உருவாகி ஒரு கொடியின் கீழ் கொண்டு வந்து கோடான கோடி மக்களை ஆளும் பொறுப்பை காந்தி நேரு போன்ற சப்பானி அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர்களுக்கு கொஞ்சம் விருப்பம் இல்லாததும் காரணம்.

அநியாமாக ஆங்கிலேயர்கள் மீது வீண் அவதூறுகளை அள்ளி வீசுவதை நிறுத்த வேண்டும். ஒரு போய்யை ஆயிரம் முறை திரும்ப திரும்ப சொல்வதால் அது ஒரு போதும் உண்மையாகி விடாது. தீர வசாரித்து வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபிப்பதே சர்யான முறை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை இந்தியர்களை அடிமைகளாக நடத்தினர் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் ஏற்றுக்கொள்ள தயார்.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைகளாக வைத்து நடத்தினர் என்பது "சுத்தப் பொய்". இது வெரும் ஒரு கட்டுக் கதை.

எனது இக்கருத்துக்களில் தவறுகள் இருக்கலாம். சுட்டுக்காட்டி வாதமிட வரவேற்கிறேன்.

VOICE OF INDIAN சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு மாசிலா அவர்களே;
வரலாறு என்பதே பொய் என்று உரைப்பவர்களும் இருக்கின்றார்கள் இன்றைய இளைஞர்கள் அறிவுத்தெளிவு என்பது அனுபவத்தில் மட்டுமே என்று நம்புகின்றார்கள் தொடரை தொடர்ந்து வாசியுங்கள் உங்களது ஐயம் நீங்கும் என்று நம்புகிறேன்

VOICE OF INDIAN சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு Robin அவர்களே;
வரலாறு என்பதே பொய் என்று உரைப்பவர்களும் இருக்கின்றார்கள் இன்றைய இளைஞர்கள் அறிவுத்தெளிவு என்பது அனுபவத்தில் மட்டுமே என்று நம்புகின்றார்கள் தொடரை தொடர்ந்து வாசியுங்கள் உங்களது ஐயம் நீங்கும் என்று நம்புகிறேன்

Robin சொன்னது…

வரலாற்றை திரித்து தங்கள் விருப்பபடி எழுத பலர் கிளம்பியிருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர் என்பது முதல் வாக்கியத்திலேயே தெரிகிறது. ஆங்கிலேயர்கள் பரம யோக்கியர்கள் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் சதி, தேவதாசி முறை போன்ற அநியாயங்களுக்கு எதிராக குரல் எழுப்பபட்டதும் சட்டமியற்றப்பட்டதும் ஆங்கிலேயர் காலத்தில்தான். இந்தியா எப்போதும் செல்வ செழிப்போடுதான் இருக்கிறது. ஆனால் இந்தியர்களில் ஒரு கூட்டத்தை தவிர யாரும் வசதியான வாழ்க்கை வாழவில்லை. ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே ஆண்டான் அடிமை முறையே வழக்கத்திலிருந்தது. உயர் சாதியினர் தாழ்ந்த சாதியினரை ஒடுக்கினர். மக்களில் நல்லவர்கள் மட்டுமல்ல கெட்டவர்களும் இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் தேவதாசி முறை வந்திருக்காது.

Robin சொன்னது…

வரலாறு எழுதும்போது References/Sources கொடுக்கவேண்டும்.

Massy spl France. சொன்னது…

எனது மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்கிற புரட்டை நாள் ஏற்கமாட்டேன். ஏனென்றால் அதுதான் உண்மை. மாறாக, அன்றும் சரி இன்றும் சரி மத தீவிரவாத ஆதிக்க சாதி வெறியர்களால் பூர்வீக ஏழைகள், மண்ணின் மைந்தர்களான தலித் மக்கள் சிறுபான்மை இனத்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டு தடம் விலாசம் இல்லாமல் அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இளைஞர்களுக்கு வரலாறு கற்பிக்க புற்றீசல் போல் கிளம்பி எவ்வித ஆதாரமும் அத்தாட்சியும் இல்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு இலவச விளம்பரம் தேடி அலையும் உங்கள் போன்றவர்களின் எழுத்தால் இளைஞர்கள் அவமானப்பட்டு தாழ்மை உணர்வு கொண்டு மனம் பாதிக்கப்படுவர். வீணான புரளிகளை உலாவ விட்டு வேற்றினத்தவர் மீது இல்லாத செய்யாத குற்றங்களை சுமத்தி வெறுப்பு பிரிவினை உணர்வுகளை வளர்ப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது கருத்துக்கு நன்றி
நினைப்பதையே அனைவரும் நினைக்க
வேண்டும் என்று எண்ணுவதில்லை.
பிடித்ததை மட்டுமே பிறர் செய்ய
வேண்டும் என்று கட்டளை இடுவதில்லை
குறுகிய இடத்தில் இருக்க
மட்டும் விரும்புவதும் இல்லை.
பதிவுகளை தொடர்ந்தால் மேலும் பேசலாம்
இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 2 வந்துவிட்டது

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது கருத்துக்கு நன்றி
நினைப்பதையே அனைவரும் நினைக்க
வேண்டும் என்று எண்ணுவதில்லை.
பிடித்ததை மட்டுமே பிறர் செய்ய
வேண்டும் என்று கட்டளை இடுவதில்லை
குறுகிய இடத்தில் இருக்க
மட்டும் விரும்புவதும் இல்லை.
பதிவுகளை தொடர்ந்தால் மேலும் பேசலாம்
இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 2 வந்துவிட்டது

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது கருத்துக்கு நன்றி
நினைப்பதையே அனைவரும் நினைக்க
வேண்டும் என்று எண்ணுவதில்லை.
பிடித்ததை மட்டுமே பிறர் செய்ய
வேண்டும் என்று கட்டளை இடுவதில்லை
குறுகிய இடத்தில் இருக்க
மட்டும் விரும்புவதும் இல்லை.
பதிவுகளை தொடர்ந்தால் மேலும் பேசலாம்
இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 2 வந்துவிட்டது