ஆதரவாளர்கள்

சனி, 16 மார்ச், 2013

இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 1

1840 ஆம் ஆடுகளில் வெள்ளையர்கள் வணிகம் மூலம் இந்திய மண்ணில் பலமான கால் பதித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் இந்திய மக்கள்
செல்வச் செழிப்புடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ஆங்கிலேயர்கள் சிட்ட்ரரசர்களை அடிமைகளாக்கி ஆட்சிமுறையை மாற்றி அவர்களது வியாபாரம் பெருகவும் இந்திய திருநாட்டின் செல்வங்களைக் கொள்ளை அடிக்கவும் திட்டமிட்டார்கள் அவர்களுக்கு அத்தகு குதிரைக் கொம்பாகவே இருந்தது. இங்கிலாந்து ராணி பாராளுமன்றத்திலே இந்த பிரச்னைக்கு தீர்வு வேண்டுமென்ற நோக்கத்தில் விவாதித்து அதற்கு ஜான் மெக்காலே தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார்கள். 1856 ஆம் ஆண்டுவரை அந்த கமிட்டி உறுப்பினர்கள் மெக்காலே தலைமையில் இந்தியா முல்குவதும் சுற்றுப்பயணம் செய்தார்கள். தமிழகம் வந்தபொழுது மதுரை அருகே சாமானாயக்கன் ஜாமீன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வையிட்டு மக்களிடம் பேசி வரும்போது தை மாதமாகையால் மக்கள் நெல் வயலில் கதிர் அறுப்பதும் களத்திலே நெல்மணிகளைக் கயவைப்பதும் என்று சுறுசுறுப்பாக இருக்கின்றார்கள்.அப்பொழுது நெல் காய்ந்துகொண்டு இருக்கும் களம் அருகில் இருந்த தம்பை அம்மாள் எனும் மூதாட்டியிடம் தமிழ் தெரிந்த ஆங்கிலேயன் உதவியாடு உரையாடிக் கொண்டிருக்கும் போது களத்திலே குருவிகள் நெல்மணிகளைக் கொத்தித் தின்ன வந்து அமர்ந்தது .அப்பொழுது அந்த மூதாட்டி தன காதிலிருந்த தங்கத்திலான தொங்கட்டானை கலட்டி வீசி குருவியை விரட்டினார் . அதைப் பார்த்த ஆங்கிலேயன் பயத்தினால் உடனே அங்கிருந்து சென்றுவிட்டான். இதுகுறித்து அவன் துறையிடம் சொன்னதும் அந்த துறைக்கு உடனே அந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த ஊரின் பெயர் இரும்பை முறிக்கும் சாமானாயக்கன் ஜாமீன் என்று தெரிந்ததும் அந்த ஊரைப் பற்றியும் அதென்ன இரும்பை முறிக்கும் சாமானாயக்கனுர் அதை நானே நெறி சென்று பார்க்க வேண்டும் அந்த ஜமீந்தாரருக்கு நான் வருகின்றேன் என்று  தகவல் சொல்லிவிடுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே தகவல் சொல்லவும் சாமானாயக்கருக்கு ஒரு சந்தேகம் இந்த ஆங்கிலேயன் பெற்றாசை பிடித்தவன் ஊருக்குள் விட்டால் ஆபத்து என்ன செய்வது என்று ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி துறை வரும் நாள் வந்தது துறை மற்ற பரிவாரங்களுடன் குதிரையில் வரும் பொழுது வழிதெரியாமல் யோசனையாக யாரிடம் கேட்கலாம் என்று பார்த்துகொண்டு வரும்பொழுது மாடுமெஇத்துக் கொண்டிருந்த ஒருவர் கண்ணில் பட ஐயா பெரியவரே இந்த சாமானாயக்கன் ஜமீனுக்கு எப்பாடு போகவேண்டும் நாங்கள் வந்த பாதை சரியானது தானா என்று கேட்க அந்த பெரியவர் தனது தலையில் கட்டியிருந்த உருமாலை கொஞ்சம் தூக்கி பிடித்து நீங்கள் எல்லாம் யாரு எங்கிருந்து வருகின்றீர்கள் என்ன காரணமாய் வந்தீர்கள் என்று சொன்னால் நான் சொல்லுகின்றேன் என்று கூறினார். குதிரையில் வந்த ஒரு நபர் அந்த பெரியவரைப் பார்த்து பெரியவரே இரும்பை முறிக்கும் சாமானயக்கன் ஜமீந்தார் இரும்பை முறிக்கும் வல்லமை படித்தவராம் அவரை நாங்கள் பார்த்து எப்படி இரும்பை முறிக்கின்றார் என்று பார்க்கவே வந்தோம் என்றார். சரி எங்கள் ஜமீந்தார் எப்பவும் வேலையாக இருப்பார் அவரிடம் இதற்காக வந்தோம் எற்று சொன்னால் வேலையைக் கெடுக்க வந்தீரா என்று கோபம் கொண்டு உங்களை தண்டிக்க வாய்ப்புள்ளது இந்த ஜாமீன் மக்கள் எல்லோருமே வீரம் மிக்கவர்கள் தான் நீங்கள் எந்த இரும்பை முறிக்க வேண்டும் என்று என்னுகிரிரோ அதை என்னிடம் கொடுங்கள் நான் முறித்து காட்டுகின்றேன் முடியாவிட்டால் நீங்கள் என்னிவன்தது போலவே ஜமீனைப் பார்க்கலாம் என்றார். அப்படியா சரி என்று கொண்டுவந்த கடப்பாரையில் ஒண்டை பெரியவரிடம் வெள்ளையன் கொடுத்தான். கடப்பாறையைப் பெற்ற பெரியவர் வாங்கிய வேகத்திலேயே இரண்டுதுண்டாய் உடைத்து போட்டார். வேல்லைக்கரதுரைக்கு ஒரே ஆச்சரியம் மாடுமேய்க்கும் இந்த கிழவனே இவ்வளவு வலுவுடன் இருந்தால் இந்த ஜமீந்தார் எவ்வளவு வலுவோடு இருப்பார் நாம் அவ்விடம் சென்றால் ஆபத்து நாம் வந்த வழியே திரும்பிட வேண்டும் என்று தன்னிடம் சேர்ந்தார். அன்று மாலை சமீந்தார் வந்த ஆபத்து நீங்கியது என்று சொல்லவும் தல்லாளி கேட்டார் எப்படி ஐயா அவர்கள் வருகிறேன் என்று சொல்லி வராமல் இருக்கிறார்கள் நீங்களோ ஆபத்து நீங்கியத்கு என்கிறீரே எப்படி எற்று கேட்டார். நான் மாடு மேய்ப்பவராக  வேடமிட்டு வழியில் மாடு மேய்த்து கொண்டு இருந்ததையும் நடந்ததையும் சொல்லி இனி நம் குடிகள் அச்சப்பட வேண்டாம் என்று நம்பிக்கையூட்டினார். அதே நேரம் வெள்ளைக்கார துறை உயிர் தப்பினோம் என்று சொல்லிக்கொண்டு அவனது அரண்மனை செல்ல மெக்காலே நடந்த விபரத்தைக் கேட்டு இப்படி வீரமுள்ள மக்களா என்று வியந்து தன பயணத்தை தொடர்ந்தான். ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது அனைத்து மக்களும் செல்வச் செழிப்புடன் கவலியின்றி வாழ்வதைக் கண்டான் கூடவே இன்னொன்றையும் கண்டான் ..........

கருத்துகள் இல்லை: