ஆதரவாளர்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

தமிழ் மண்ணில் தமிழனுக்காக புறப்படு புரட்சிசெய்

இரண்டு கேரள மீனவனுக்காக கிளர்ந்தெழுந்து குற்றமிழைத்த இத்தாலியர்களை நாட்டுக்கு வர செய்த மத்திய அரசும் வடநாட்டு ஊடகங்களும்..தமிழக மீனவனுக்காக பொங்காதது ஏன்?

தான் வடநாட்டுல வெளிநாட்டுல பிரச்சனைனா உடனே தமிழனுக்கு பொங்கும் இங்க இருக்கிற பிரச்சனைய எல்லாம் யாராவது முன்னெடுக்க விட்டு கமண்ட்ஸ் போட்டுட்டு கம்முனு இருப்பான் எங்கேயாவது பிரச்சனைனா அதாவது யாராவது தொடங்கி அதுவும் நல்லாப் போனா தமிழனும் போராடுவான் ஏன் நடக்குது யார் காரணம் நோக்கம் என்ன? அதெல்லாம் தேவையில்லை எல்லாரும் போராடும் போது நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது ரத்தம் கொதிக்குது என்று வீரம் பேசுவான் இதுனால யாருக்காச்சும் பயன் இருந்ததா என்றால் கொள்ளைக் காரனுக்கு மட்டுமே பயன் மக்களுக்கு ஒரு மண்ணும் கிடைத்திருக்காது ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வந்து வெற்றி பெற்றுவிடும் இவர்களுக்கு சொந்தமாக புத்தி கிடையாது சொந்தமா எதையும் செய்யும் திராணி இல்லை எங்காவது நடக்கும் பிரச்சனைகள் அதுவும் கொஞ்சம் பிரபலம் ஆனபிறகு தமிழன் போராட வருவான் அப்புறம் எப்படி வடநாட்டுக் காரன் ஊடகங்கள் எல்லாம் தமிழனுக்கு போராடும்? அவர்களுக்கு நல்லாத் தெரியும் இதெல்லாம் சும்மா சலம்பல் பண்ணுவாங்க அப்புறம் ஒன்னும் கேட்க மாட்டாங்க இந்திய சுதந்திரப் போராட்டம் தொடக்கம் தமிழ் மண்ணில் தொடங்கி இந்தியா முழுதும் பரவியது. ஆனால் தமிழ் மண்ணில் தமிழனுக்காக முன்னெடுக்க ?

1 கருத்து:

VOICE OF INDIAN சொன்னது…

கை நிறைய சம்ம்பலம் கப்பல்ல வேலை ரெடி. நீங்க ரெடியா என்ன வேலையினா கப்பல் தண்ணிக்குள போகும் பொது ஏதாவது ரிப்பெராகி நின்னு போச்சுனா............ அதுவா சரியானா பரவாஇல்ல ............ இல்லாட்டி நீங்க கடல்ல எறங்கி கப்பல தள்ளிவிடனும் அவ்வளவுதான்