ஆதரவாளர்கள்

வியாழன், 18 ஏப்ரல், 2013

இந்தப் பக்கத்தை யாரு படிக்க வேண்டாம்

இந்தப் பக்கத்தை யாரு படிக்க வேண்டாம்  சித்திரத் தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா (ஏழரை ஆரம்பிக்குது  என்று எனக்கு தெரியாது)  சுய  அனுபவம்


சென்னையில் மெரினா பீச்சுக்கு எத்கிரில் விவேகானந்தர் இல்லம் அருகில்  லேடி வெலிங்க்டன் ஸ்கூல் மைதானத்தில் 14.4.13 முதல் 28.4.13 வரை நடைபெறுகின்றது. இன்று 17-3-13  நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். கடல் காற்று அருமையாக வீசுகின்றது. வெயில் என்பதே தெரியவில்லை. அனைத்து பதிப்பகத்தாரும் தள்ளுபடியில் விற்பனை செய்கின்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகள் தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடுகள் செய்துள்ளது. இன்றையதினம் திரு இறையன்பு IAS அவர்களும் எழுத்தாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களும் நல்ல சிந்தனைகளை வழங்கினார்கள். மக்கள் வருகை சற்று குறைவுதான் சனி ஞாயிறுதான் மக்கள் அதிகம் வருவார்கள் என்று புத்தக விற்பணையாளர்கள்  எதிர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் பார்த்தவரையில் புத்தகங்கள் மட்டுமல்லாது CD யாஹவும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றது. தூதர்சன் கூட கடை போட்டு இருக்கு நான் ஒரு ஆங்கில இலக்கணம் CD வாங்கினேன் தீபக் போட்டாசாப் விளக்கம் CD வாங்கிக்கொண்டார். 

அத்துடன் வெளியில் வந்து ஒரு கப் காப்பி சாப்பிடலாமே (ஏழரை ஆரம்பிக்கும் என்று அப்போது எனக்கு தெரியாது) என்று கண்காட்சியில் அமைந்துள்ள உணவுக் கூடம் வந்தோம். புத்தகம் வாங்கும் இடத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நம் மக்கள் சாப்பிடத்தான் வந்தார்களோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. உள்ளே  ஒரு ரவுண்டு வந்தேன் . பல அயிட்டம் இருந்தது அதில் எனக்கு பிடித்த பணியாரம் கார சட்டினி 30 ரூபாயம் ஒரு பிளேட்டில் 6 பணியாரம் இருந்தது. வாங்கிக்கொண்டோம் கார சட்டினி போட்டு   சாப்பிட்டோம் தீபக் வெஜிடபுள் ரோல் என்று சொல்லவும் (அதை 50 ரூபாய்க்கு மூன்று பீஸ் தருகிறார்கள்) அதையும் சாப்பிட்டோம் . விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனால்  சுடச் சுட சூடாக இருந்தது.

 சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவ வேண்டுமே அங்கே வாஸ் பேசனே இல்லை. ஆகா அரம்பிச்சுடிச்சி ஏழரை தூங்கிய நம் சுயமரியாதை உரிமைகேட்டு போராட ஆரம்பித்தது  அதோ வெளியில் இருக்கின்றது என்று சொல்ல அங்கு வாஸ் பேசன இருந்தது ஆனால் தண்ணி இல்லை. என்ன கொடுமை . யார் இதன் முதலாளி அவரை நான் பார்க்கவேண்டும் என்றேன். டோக்கன் போடும் இடம் வந்தேன்  என்னம்மா சாப்பிடுபவர்களுக்கு குடிக்க தண்ணி இல்லை கை கழுவ தண்ணி இல்லை தண்ணீர் வைத்து விட்டு பிறகு டோக்கன் குடுங்கள். எங்களுக்கு உடனே தண்ணீர் கொடுங்கள் என்றேன். ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து கொடுத்தார்கள் வாங்கி கை கழுவினோம் காசு கேட் பார்களா? வாங்கிக் கழுவிக்கொண்டு தண்ணீர் இல்லாமல் டோக்கன் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்பு செய்தேன் ( இந்தியக் குடிமகன் என் உரிமையைக் கேட்கவும் தவறு நடந்தா அதைக் கேட்கவும் உரிமை உண்டு).

அப்பொழுது இரண்டு ஆண்கள் நல்ல பண்ட சர்ட்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். எங்கே சார் உங்களுக்கு தண்ணீர் இருக்கா குடுத்தார்களா என்றேன். இல்லை என்றார்கள் . ஏன் கேட்டு வாங்க வேண்டியதது தானே ஏன் நீங்கள் கேட்கவில்லை என்றேன். பாவம் பதில் சொல்லத் தெரியாமல் அமைதியானார்கள்.

 அவர்கள் அப்படியே பழகிப்போனவர்கள் அல்லவா எல்லாம் சிவா மயம் என்பார்கள் இவர்களுக்கு எல்லாம் பய மயம் கேட்கும் சக்தியை நம் அரசியல் வாதிகள் மட்டுமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் அவர்கள் பேசுவதைக் கேட்க மட்டும் தான் இவர்களுக்கு தெரியும், இருப்பினும் அவர்களையும் நீங்கள் ஆம்பிள்ளைகள் தானே கேட்க வேண்டியது தானே காசு கொடுக்காம சும்மாவா சாப்பிடுகிரீர்கள் என்று ஒரு பிடி பிடித்தேன். இனி நிச்சயம் கேட்பார்கள் என்று நினைக்கின்றேன் அவர்கள் அறியாத தெரியாத் பயந்த விசயங்களை பேச கற்றுக் கொடுத்தேன். இதோ பாருங்கள் நான் கேட்டேன் மினரல் வாட்டர் குடுத்து இருக்காங்க நீங்களும் உங்களது உரிமையை கேட்கத் தவறாதீர்கள். கேட்டாத்தான் கிடைக்கும் நீங்கள் எல்லாம் அமைதியாக இருந்தால் ஏமாற்றத் தான் செய்வார்கள். என்று வகுப்பே எடுத்தேன் அவர்களுடன் சேர்ந்து அங்கிருந்த எல்லோரும் கற்றுக்கொண்டனர்.

நிர்வாகத்தினர் உடனே தண்ணீர் ஏற்பாடு செய்துவிட்டார்கள். எனக்கு மட்டும் என்றால் மினரல் வாட்டர் வந்ததும் கிளம்பியிருக்கலாம் அப்படி செய்யவில்லை நம்மால இனி இங்கு  சாப்பிட வருகிறவர்களுக்கு கை கழுவ மட்டும் இல்லை குடிக்கவும் வாட்டர் இருக்கு. நாலு பேருக்கு நல்லது செய்தோம் என்ற திருப்தியுடன் வெளியில் வந்தால் கடல் காற்றை இதமாய் அனுபவித்துக் கொண்டே சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டுவிட்டோம்.

இது மாதிரி இடங்களில் நமது உரிமையைக் கேட்ட்கக் கூட திராணியில்லாமல் டிஸ்யு பேப்பரில் கையைத் துடைத்துக் கொண்டு போகும் மனிதர்களை என்னவென்று சொல்வது. ஒரு உணவகம் நடத்த விதிமுறைகள் இருக்கு அந்த விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் அரசோ அல்லது தனியார் உணவகங்களோ நடத்த முடியாது .அங்கு சுகாதாரம் உள்ளிட்ட சில முக்கியமானது. நண்பர்களே இனி நீங்கள் எங்கு சென்றாலும் விழிப்புடன் இருங்கள் நடக்கும் தவறை சுட்டிக் காட்டுவோம் கேட்கவில்லை என்றால் அவர்கள் தலையில் குட்டிக் காட்டுவோம். பயம் அல்லது தயக்கம்  கொள்ளாதீர்கள் அவர்கள் பாம்பைப் போன்றவர்கள். பாம்பை நாம் அடித்து விடுவோம் என்ற பயத்தில் தான் சீரும் அதைப் பார்த்து பயந்தால் நம்மைத் தாக்கத் துணியும். அட அவ்வளவு ஏனுங்க இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு போகும் பொது தெரு நாய்கள் உங்களைப் பார்த்து குறைக்கும் நீங்கள் வேகமாக சென்றால் துரத்தும் நின்று திரும்பிப் பார்த்தால் தெருநாய் ஓடிவிடும் இந்த அனுபவம் நம் எல்லோருக்கும் இருந்திருக்கும். இது தான் உரிமையைக் கேட்க தயங்கினால் உங்களை ஏமாற்றிவிடுவார்.

நீங்கள் உங்களது நியாயமான கோரிக்கை மற்றும் புகார்களுக்கு சட்டப்படி நியாயமான உரிமைகளைப் பெற துணிவுடன் செயல் படுங்கள் வழிகாட்ட  இந்தியன் குரல் இருக்கின்றது. இந்தியன் குரல் நன்கொடை பெறுவதில்லை, உறுப்பினர் கட்டணம் இல்லை, சேவைக்கு கட்டணம் பெறுவது இல்லை. இதன் நிறுவனர்களின் சொந்த உழைப்பின் பணமே சேவைக்கு செலவிடப் படுகின்றது. எங்களது சம்பாத்தியத்தில் ஒரு பங்கை இதற்காக ஒதுக்கி செயல்படுகின்றோம். மாலை மரியாதையை ஏற்பதில்லை. எங்களுக்கு பாராட்டு தேவையில்லை. பிடித்திருந்தால் உங்கள் அருகில் உள்ள மக்களுக்கு உங்களது அடையாளத்தை இழக்காமல்  உங்கள் பெயரில் அல்லது நீங்கள் சார்ந்த அமைப்பின் பெயரிலேயே சேவை செய்ய வழி காட்டுகின்றோம் உதவுகின்றோம். மேலும் விபரங்களைப் பெற உதவி மையத்தை அணுகுங்கள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... இதெல்லாம் அங்கு சின்ன விசயம்...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நான் பார்க்கும் நல்ல பல தகவல்களை எனது அண்ணனிடம் பகிர்வதுண்டு... அவரும் உங்கள் தளத்தில் தொடர்கிறார்... (படிக்க மட்டும் - பிளாக்கர் அல்ல) தங்கள் தவறாக எடுத்துக் கொண்டதாக கூறினார்... அப்படி எதுவும் (reply) கருத்துரை இல்லை...

சுருக்கமாக : சென்னையில் இருபது வருடம் வாழ்ந்துள்ளேன்... நியாயமான கோபங்கள் பல உண்டு... தீர்வான பல பிரச்சனைகளும் உண்டு...

தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்... நன்றிகள்..