ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க


சென்னை:  காவ‌ல்துறை‌யின‌ர் பொது மக்களிடம் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌‌றிய மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன், லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனது செல்போனில் புகார் செய்யலாம் எ‌ன்றா‌ர். சென்னையில் இன்று(30/01/2010)  செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் பல்வேறு வழக்குகள் குறித்துப் பேசினார். பின்னர் ஒரு செய்தியாளர் காவ‌ல்நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக சென்றால் காவல‌ர்‌க‌ளே லஞ்சம் கேட்கிறார்களே எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர்.
இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன், கடமையை செய்ய லஞ்சம் கேட்பது மிகப் பெரிய குற்றம். காவ‌ல்துறை‌யின‌ர் பொது மக்களிடம் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என் செல்போனில் (9840983832) புகார் செய்யலாம் எ‌ன்றா‌ர்.




லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க! – சென்னை கமிஷனர் அதிரடி
வாகன சோதனை என்ற பெயரில், அல்லது புகார் கொடுக்கச்செஸ்ஸும் இடங்களில் போலீசார் யாரேனும் லஞ்சம் கேட்டால் என்னிடம் விவரம் சொல்லுங்கள், புகார் சொல்லுங்கள். அதற்காக எனது மொபைல் நம்பரும் தருகிறேன்” என்கிறார் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன்.
அவர் இன்று நிருபர்களிடம் கூறியது:
சென்னையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் வேட்டையில், போக்குவரத்து போலீசார் சிக்கியுள்ளது குறித்த அறிக்கை, இன்னும் எனக்கு வரவில்லை. லஞ்சம் என்பது சமுதாயக் குற்றம். பொதுமக்கள் கொடுப்பதால்தான், போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். பிச்சைக்காரனிடம் பத்து முறை பணம் இல்லை எனத் தெரிவித்தால், அவன் மீண்டும் வரமாட்டான்.
அதேபோல, லஞ்சம் கேட்கும் போலீசாரிடமும் பணம் இல்லை என திரும்பத் திரும்ப கூறுங்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால், வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் கூறினால், எனது மொபைல் எண்ணில் புகார் செய்யுங்கள்.
எனது மொபைல் நம்பரை இதற்காகவே பொதுமக்களுக்குத் தருகிறேன்:98409 83832
லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்காமல், விதி மீறல் குற்றப்பதிவு ரசீது மட்டும் வழங்கி, அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் செலுத்துவது குறித்து, கூடுதல் கமிஷனரிடம் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்க உள்ளேன்.
போலீஸ் நிலையங்களில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் கேட்டுள்ளோம். தற்போது உள்ள போலீசார் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், நன்றாக இருக்கும்”, என்றார்.





Friday, October 15, 2010

லஞ்சம் ஒழிப்பது பணி ., ஆனால் செய்தது லஞ்சம் வாங்குவது., இப்படியும் ஒரு இன்ஸ்பெக்டர்

 பணியில் பல விதம் உண்டு போலீசார் பாதுகாப்பது என்றால் அவர்களே சில நேரங்களில் பழிகாரனாக மாறுவதும் உண்டு. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்காரனாக இருக்க வேண்டியவன் திருடனாக மாறிய கதை மதுரையில் நடந்திருக்கிறது. போலீசில் பல பிரிவுகள் உண்டு போலீசுக்கே போலீஸ் இருப்பதுபோல நமது நாட்டில் பல பிரிவு கண்காணிப்பில் உண்டு . ஆனால் இந்த போலீசே குற்றவாளியாக நிறுத்தப்படுவது தலைக்குனிவான விஷயம் தான்.
தமிழகத்தில் முதல் ஆளாக கைதானவர் :  லஞ்சத்தை ஒழிக்க வேண்டி பணியாற்ற வேண்டியவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது 

செய்யப்பட்டுள்ளார் என்பது கொஞ்சம் நெருடலான ஹைலைட். மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் பெருமாள்பாண்டி. இவர் ஒரு டாக்டரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனை கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் பெருமாள்பாண்டியை எலிக்கு மருந்து வைத்தாற்போல கச்சிதமாக பிடித்தனர். இப்போது பெருமாள் பாண்டி போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக அமர்த்தப்பட்டார். போலீசார் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது உண்டு ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் முதன்முறை.காலை 11 மணி அளவில் நிருபர்களிடம் போலீசார் முழு விவரங்கள் தெரிவித்தனர். 


நடந்தது என்ன ? : மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் அசோகக்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக சொõத்து சேர்த்ததாக புகார் வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டி டாக்டரை மிரட்டியுள்ளார். இவரது உறவினர் நமச்சிவாயம் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை பார்மசிஸ்டாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மூலம் டாக்டருக்கு லஞ்சம் கேட்டு இன்ஸ்பெக்டர் தூது அனுப்பியுள்ளார்.


ரூ. 5 லட்சம் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு முதல் தவணையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்க டாக்டர் ஒத்துக்கொண்டார். அண்ணாநகரில் உள்ள கிளினிக்கிற்கு நமச்சிவாயம் வரவழைக்கப்பட்டார். இவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார் நமச்சிவாயத்தை கைது செய்தனர். தொடர்ந்து தகவல் உறுதி செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டி கைது செய்யப்பட்டார்.ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது., தொடர்ந்து சி.ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் 12 ம் தேதி வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


டு போலீசார் பாதுகாப்பது என்றால் அவர்களே சில நேரங்களில் பழிகாரனாக மாறுவதும் உண்டு. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்காரனாக இருக்க வேண்டியவன் திருடனாக மாறிய கதை மதுரையில் நடந்திருக்கிறது. போலீசில் பல பிரிவுகள் உண்டு போலீசுக்கே போலீஸ் இருப்பதுபோல நமது நாட்டில் பல பிரிவு கண்காணிப்பில் உண்டு . ஆனால் இந்த போலீசே குற்றவாளியாக நிறுத்தப்படுவது தலைக்குனிவான விஷயம் தான்.
தமிழகத்தில் முதல் ஆளாக கைதானவர் :  லஞ்சத்தை ஒழிக்க வேண்டி பணியாற்ற வேண்டியவர் லஞ்சம் வாங்கிய குற்ற
த்திற்காக கைது 

செய்யப்பட்டுள்ளார் என்பது கொஞ்சம் நெருடலான ஹைலைட். மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் பெருமாள்பாண்டி. இவர் ஒரு டாக்டரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனை கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் பெருமாள்பாண்டியை எலிக்கு மருந்து வைத்தாற்போல கச்சிதமாக பிடித்தனர். இப்போது பெருமாள் பாண்டி போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக அமர்த்தப்பட்டார். போலீசார் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது உண்டு ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் முதன்முறை.காலை 11 மணி அளவில் நிருபர்களிடம் போலீசார் முழு விவரங்கள் தெரிவித்தனர். 


நடந்தது என்ன ? : மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் அசோகக்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக சொõத்து சேர்த்ததாக புகார் வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டி டாக்டரை மிரட்டியுள்ளார். இவரது உறவினர் நமச்சிவாயம் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை பார்மசிஸ்டாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மூலம் டாக்டருக்கு லஞ்சம் கேட்டு இன்ஸ்பெக்டர் தூது அனுப்பியுள்ளார்.


ரூ. 5 லட்சம் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு முதல் தவணையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்க டாக்டர் ஒத்துக்கொண்டார். அண்ணாநகரில் உள்ள கிளினிக்கிற்கு நமச்சிவாயம் வரவழைக்கப்பட்டார். இவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார் நமச்சிவாயத்தை கைது செய்தனர். தொடர்ந்து தகவல் உறுதி செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டி கைது செய்யப்பட்டார்.ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது., தொடர்ந்து சி.ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் 12 ம் தேதி வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


லஞ்ச ஒழிப்பில் பணியாற்ற தகுதிகள் :  லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரிவில் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் போஸ்டிங் கிடைக்காது. யார் விருப்பப்படுகிறார்கள் ? உண்மையில் விருப்பம் உள்ளவர்தானா, நேர்மையானர்தானா, நேர்மையாக இருந்தாலும் பார்சியாலிட்டி பார்க்காதவரா என ஒரு பிரிவிவினர் விருப்பம் தெரிவித்த போலீசாரை மறைமுகமாக கண்காணிப்பர் . பின்னர்தான் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவார். அப்படி இருந்தும் இந்த பெருமாள்பாண்டி எப்படி பசும்தோல் போர்த்திய புலியாக இருந்தார் என்பது தான் தற்போதைய கேள்வி.  


சென்னை: 'எந்த வேலைக்காகவும் லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வற்புறுத் தினால், எங்கள் கழகத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள், நாங்கள் உதவுகிறோம்,'' என்று அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கழகத்தின் தலைவர் ரவீந்திர திவேதி கூறினார்.
tbldistrictnews_91901361943அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கழகத்தின் சென்னை கிளையின் சார் பில், லஞ்ச ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய விளம்பர 'ஸ்டிக்கர்' வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. 
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று லஞ்ச ஒழிப்பு கழகத்தின் அகில இந்திய தலைவர் ரவீந்திர திவேதி பேசியதாவது: எந்த வேலையாக இருந்தாலும் யாருக்கும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க கூடாது. யாரும் வற்புறுத்தி லஞ்சம் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. லஞ்சம் கொடுத் தால் தான் உங்கள் கோரிக் கைகள் நிறைவேற்றப் படும், பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என்று அரசு அதிகாரிகள், பணியாளர்கள் கேட்டால் உடனடியாக லஞ்ச ஒழிப்பு கழகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசுக்கும், சம்பந்தப் பட்ட துறையின் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.
சென்னையில் 98401 12226, 93810 05734, மதுரையில் 93452 14242, கோவையில்99408 51827, கிருஷ்ணகிரியில் 94430 53533 என்ற மொபைல் போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பு கழகத்தின் சென்னை தலைவர் கமலேஷ். செயலர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!



இப்ப செய்தித்தாளை எடுத்தால் குறைந்தது ஒரு செய்தியாவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பிரகஸ்பதிகளை பற்றி வந்து விடுகிறது. லஞ்சம் என்பது நம் கலாசாரத்துடன் ஊறிய ஒன்று. இதைப் போய் பொறி வைக்கிறேன் பிடிக்கிறேன் என்று கிளம்பினால் அப்புறம் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கும் நம் அரசு ஊழியர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் .

ஒருமுறை என் நண்பர் ஒருவரின் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிய போது தரகர் ஒரு ஜாதகத்தை கொடுத்தார் கூடவே இவர் வணிக வரி துறையில் வேலை செய்கிறார் சம்பளத்தை விட கிம்பளம் அதிகம் என்றார். அவருக்குத்தான் அந்த பெண்ணை கட்டி கொடுத்தார்கள். ஒருவேளை அந்த மாப்பிள்ளை நேர்மையாக இருந்திருப்பாரேயானால் பெண் கிடைத்திருக்குமா ? கிடைத்திருக்கும் என்ன கொஞ்சம் நாள் ஆகும். ஏனென்றால் அவர்தான் பிழைக்க தெரியாத ஆள் ஆயிற்றே !

சில வருடங்களுக்கு முன்பு நான் விற்பனை பிரதிநிதியாகபணியாற்றிய ஒரு தனியார் நிறுவனத்திற்காக மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரியை சந்தித்த போது , எங்கள் நிறுவனத்தின் பொருளை வாங்க பத்து சதவித கமிஷன் கேட்டு "வேண்டுமென்றால் அந்த தொகையை உங்கள் விலையில் கூட்டியே கொடுங்கள் கவர்மென்ட் சொத்து புள்ள இல்லாத சொத்துதானே" என்றார். ஆஹா என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு. எனக்கு ஒரு புது மொழியை சொல்லிகொடுத்த திலகம் அவர்.

அனால் அவரைப்போல் பெருந்தன்மையாய் தமிழக அரசின் ஊழியர் இருக்க வில்லை . டெண்டரில் மிக குறைவாக விலை கொடுத்து பெற்ற ஆர்டர்ருக்கானபேமென்டை லஞ்சம் கொடுத்தால்தான் தருவேன் என்று தீபாவளிக்கு மோதிரம் கேட்டு முறுக்கிக் கொள்ளும் புது மாப்பிள்ளையாய் அடம் பிடித்தார் . அப்புறம் வேறு வழி?...கொடுத்தோம். பெற்றோம்.

இதை தவிர ஆர்டர் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின்
பொஞ்சாதி ,புள்ளைகள் பேரில் இருக்கும் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் செய்து தர சொல்லும் குணசாலிகள் ஒருபுறம் .

அந்த கால கட்டத்தில் எனக்கு அரசு ஊழியர்கள் என்றாலே கம்பெனிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்வி செல்லும் எச்சகல சிங்கங்களாகத்தான் தோன்றும் . (எச்சகல நாய் என்றால் அவர்களுக்கு கோபம் வந்து விடும் அதனால் தான் சிங்கம்) . இப்போது அரசு ஊழியர்களுடனான தொடர்பு அற்று போனாலும் நிகழ்வு மறந்து விட வில்லை.

இப்போது அரசாங்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிகாரிகள் முதல்கொண்டு , பியுன்கள் வரை பிடித்து கொண்டிருப்பதாக காட்டினாலும் . இது பெருங்கடலின் ஒரு துளியில் நூற்றில் ஒன்றுதான். லஞ்ச ஒழுப்பு துறையின் மூலமாக லஞ்சத்தை நிச்சயம் ஒழித்து விட முடியாது. இதன் மூலம் லஞ்சம் வாங்கும் முறை தான் மாறுமே ஒழிய , லஞ்சம் வாங்குவது குறையாது. புரையோடி போன புண்ணுக்கு வெளி மருந்து சரிவராது. புண்ணின் மூலத்தை கண்டு அழிக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் மனநிலையே அதன் மூலம். அரசாங்கம் லஞ்சத்திற்கு எதிரார ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை எல்லா ஊடக மூலமாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் சிறுவர்களிடம் தங்கள் தாய் தகப்பனிடம் லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதி மொழியை வாங்க செய்ய வேண்டும் . நேர்மையாய் வேலை செய்யும் ஊழியருக்கு சிறந்த அரசு ஊழியர் என்கிற பட்டத்தை தர வேண்டும். அதனை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். லஞ்சத்திற்கு எதிரான விளம்பரத்தில் லஞ்சம் வாங்குபவர்களை சமுதாயம் வெறுப்பதாக காட்ட வேண்டும் . லஞ்சம் வாங்காதவர்களை கதாநாயகர்களாக மக்கள் அனைவரும் அவர்களை விரும்புவதாக காட்ட வேண்டும். கூடுமானால் அதற்கு என்று ஒரு பிரபல நடிகரையோ ,அல்லது முக்கிய பிரமுகரையோ (நிச்சயம் அரசியல்வாதிகளை கூடாது) பயன் படுத்தாலாம்.

ஒரு சாதாரண பாத்திரம் வளக்கும் பவுடருக்கு விளம்பரம் செய்து மக்கள் மன நிலையை மற்ற முடியும் என்றால் . இதில் முடியாதா ?

ஒரு முக்கிய விஷயம்:
என்னை போன்ற குட்டாளிக்கே இப்படி எல்லாம் யோசனை தோன்றும் போது தாங்கள் கை கழுவுவதை , கால் கழுவுவதை கூட விளம்பரம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா என்ன ? தெரியும் ஆனால் ஏன் நிறைவேற்ற மாட்டேன் என்கிறார்கள் .

தேவுடா ..இதை நான் எழுதிதான் தெரிய வேண்டுமா என்ன ?.

லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!! 

......ஹி ..ஹி . ஹி ஹு ஹு ஹு . வர்ட்டா 

கருத்துகள் இல்லை: