ஆதரவாளர்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

உச்ச நீதிமன்றத்தில் இணைய வழி வழக்கு தாக்கல்


உச்ச நீதிமன்றத்தில் இணைய வழி வழக்கு தாக்கல்

இந்தியாவின் உச்ச நீதிமன்றமும்இணையதள நிர்வாகம் மூலமாகத் தனது சேவைகளை இந்தியக் குடிமகன்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது சம்மந்தமாக அக்டோபர் 2, 1996ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இணையதளம் மூலமாக வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற நடைமுறையை அமலுக்குக் கொண்டுவந்தது. வீட்டில் இருந்தபடியே வலைதளம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய இது மிகவும் எளிய வழியாகும். இணையதளம் வலையகம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய எந்த வழக்கறிஞரின் உதவியும் தேவையில்லை. இந்தச் சேவையை சாதாரண குடிமகனிலிருந்துவழக்கறிஞர் வரை யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் எவரும்http://tempweh97.nic.in/scefiling/login.html  வலைவாசலில் நுழைந்து,தனது பெயரைஉபயோகிப்பாளர் என்ற பகுதியின் கீழ் பதிவு செய்து கொண்டுவழக்கு தாக்கல் செய்யலாம்.
இந்தச் சேவையைச் செய்யபின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • உச்சநீதிமன்றத்தின் இணையகம் மூலம் முதல் முறையாக வழக்குத் தாக்கல் செய்பவர்கள்தங்களது பெயரை உபயோகிப்பாளர் கையொப்பப் பகுதியில் பதிவுசெய்ய வேண்டும்
  • இணையகம் மூலமாக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமானால்அவர்அதிகாரப்பூர்வமான வழக்கறிஞராகவோஅல்லது வழக்குத் தொடரும் நபராகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
  • நீங்கள் பதிவு பெற்ற வழக்கறிஞராக இருந்தால் மட்டுமேவழக்கறிஞர் என்றவிருப்பத் தேர்வு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்பவரே தனது பெயரை அதற்காண இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • முதல் முறையாகப் பதிவு செய்யும்போதுஅவசியமான தகவல்களான,விலாசம்தொடர்பு கொள்ள ஏதுவான விவரங்கள்இணையக மெயில் அடையாளம்போன்றவைகள் பதிவு செய்வது அவசியம்.
  • தொழில்முறை வழக்கறிஞர் அவரது சங்கேத எண்ணை (பதிவுபெற்ற வழக்கறிஞராக இருந்தால்) இணையதள நுழைவு சொல்லை  குறிப்பிட வேண்டும். தனிநபராகசொந்தப் பொறுப்பில் வழக்குத் தாக்கல் செய்பவர் அவரது நுழைவு சொல்லை புதிதாக உருவாக்கி நுழைவுக் கட்டத்தில் குறிப்பிட வேண்டும். இதையடுத்துதேவையான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டவுடன்நுழைவு சொல் மற்றும் ரகசியகச் சொல் சேர்க்கப்படும்.
  • இவ்வாறாக வெற்றிகரமாக இணையதளத்தில் நுழைந்தவுடன்,பொறுப்பாகாமை அறிவிப்புகணினித் திரையில் தோன்றும்
  • "இந்த அறிவிப்பின் விவரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்ற குறியீட்டை   தேர்வு செய்தவுடன்அடுத்த நிலைக்கு செல்லலாம். "இதற்கு நான் ஒப்பவில்லை" என்ற பதிலைத் தேர்வு செய்யும் பட்சத்தில்மறுபடியும் நுழைவு பக்கத்திற்கு சென்று விடும்.
  • அடுத்த கட்டமாகஉபயோகிப்பாளர்தனது வழக்கின் விவரங்களைக் கணினியில் பதிவுசெய்துவழக்கு தாக்கல் செய்யலாம்.
  • 'புதிய வழக்கு’ என்ற விருப்பநிலை குறியீட்டை தேர்வு செய்வதன் மூலம் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
  • திருத்தம்’ என்றே தேர்வுக் குறியீடு உபயோகித்துஏற்கனவே தாக்கல்செய்து முடித்த வழக்கு விவரங்களில் மாறுதல்கள் செய்ய முடியும். அதே சமயத்தில் நீதிமன்றக் கட்டணத்தைக் கட்டுவதை துவங்காதவரை  திருத்தங்கள் செய்யலாம்.
  • நீதி மன்றக் கட்டணம் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்
  • கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களில் தவறுகள் இருப்பின்உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம்சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கோ அல்லது வழக்கைப் பதிவு செய்த தனி நபருக்கோஅவைகளைச் சுட்டிக்காட்டி இ-மெயில் மூலம் அனுப்பப்படும்.
  • மேலும் உதவி தேவைப்பட்டால் ‘உதவி’ என்கிற விருப்பத் தேர்வுக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
  மேலும் விவரங்களுக்கு -http://tempweh97.nic.in/scefiling/login.html
வழக்கு நிலவரம்
உச்ச நீதிமன்றத்தில் இணையம் மூலம் வழக்குப் பதிவு செய்தல்

கருத்துகள் இல்லை: