ஆதரவாளர்கள்

வியாழன், 2 மே, 2013

அரசு அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்


தனக்கு அளித்த கடமையை அரசு அலுவலர்கள் எந்த அளவு நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கு உதாரணம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்கள் 

அரசு அறிவித்த திட்டங்களை இவர்கள் தான் மக்களுக்கு கொண்டு செல்வார்கள்
முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கைம்பென் உதவி, படித்த பெண்களுக்கு திருமண வுதவி, விவசாயிகளுக்கு இழப்பீடு என்று அரசின் திட்டங்கள் இவர்கள் இல்லாமல் நகராது. இவர்களை நம்பித்தான் மக்களும் அரசும் செயலாற்ற முடியும்.
தன்கீழ் உள்ள அலுவலகங்களில் அலுவலர்கள் செயல் படுகின்றார்களா என்று சோதனை செய்ய வேண்டும்.
தனக்கு கீழ் உள்ள அலுவலகங்கள் என்ன வேலை செய்துள்ளார்கள் என்று ஆராய்ந்து பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றார்களா அலுவலகத்தில் புரோக்கர்கள் இருக்கின்றார்களா லஞ்சம் வாங்குகின்றார்களா பனிப் பதிவேடு உள்ளிட்ட அனைத்தையும் சோதனை இடவேண்டும் தவறு செய்தால் தண்டனை அளிக்க அல்லது பரிந்துரை செய்ய வேண்டும் 

ஊழல் புகார் வந்தால் அதைப் பரிசீலித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவிற்கு அனுப்பிடல் வேண்டும் .

கடந்த 300 நாட்களில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பணியாற்றிய விபரம் பொது மக்கள் பார்வைக்கு 

40 தினங்கள் ஞாயிறு விடுமுறை (சார் ஆட்சியர்களுக்கு விடுமுறை நாள் அரசால் அளிக்கப்பட வில்லை) ஞாயிற்றுக் கிழமை  மணல் திருட்டு உள்ளிட்ட கனிமங்கள் கொள்ளை சார் ஆட்சியர் பணியில் இல்லை ரெய்டு இல்லை அன்று கொலை கொள்ளை நடவாதா இவர் எப்படி விசாரணை செய்திருப்பார்?

26.5 நாட்கள் வேலூரில் ஆட்சியர் அலுவலக மீட்டிங் பங்கேற்பு

16 நாட்கள் பயிற்சியில் கலந்து கண்டதாக குறிப்பு ( என்ன பயிற்சி அளிக்கப்பட்டது இவர்களுக்கு எதைக் கற்றுகொண்டார்)


147 நாட்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்ததாக குறிப்பு ( முதிர் ஓய்வூதிய விண்ணப்பங்கள் பல மாதங்களாக கிடப்பில் இவர் ஆற்றிய பணி ?)


300 நாட்களாக வேலூர் மாவட்டம் வாணியம் பாடி திருப்பத்தூர் ஆம்பூர் VAO அலுவலகம் மற்றும் ஆய்வாளர் தாசில்தார் அலுவலகங்களில் சென்று மக்கள் குறைகளைக் கேட்கவில்லை ( குறைந்த பட்சம் ஒரு இரவு தங்கி குறைகளைக் கேட்கவேண்டும் )


 300 நாட்களில் 16 முறை அலுவலக ஆய்வு இதில் ஆம்பூர் வாணியம்பாடி தலா ஒரு முறை அதுவும் அலுவலகத்தில் மட்டும் மக்களை சந்திக்க வில்லை அனால் ஏலகிரி மலையில் தனியாக பங்களாவில்  தங்கியிருந்து ஆய்வு 13 முறை செய்தாராம் ( குளுகுளுன்னு இருக்கும் அழகான பங்களாக்களில் ஓய்வு எடுக்க வசதியான மலை தமிழ் நாட்டு முதல்வர் கோடநாட்டுல இருந்து ஆள்வது போல் இந்த சார் ஆட்சியர் அம்மா ஏலகிரி மலையில் இருந்து ஆட்சி செய்கின்றார் போலும்)

300 தினங்களில் 12 ரெய்டு ( மாதம் ஒன்று கணக்கு காட்டனுமில்ல ஆனால்  எந்த திருட்டையும் பிடிக்கவில்லை எந்த அலுவலரும் தண்டிக்கப் பட வில்லை!!! மாதம் இத்தனை கேஸ் கணக்கு காட்டு மத்ததை அமுக்கு என்று காவல் துறையில் தான் நடப்பதாக சொல்வார்கள் )


300 நாட்களாக அவரது கடமையில் 24 இனங்கள் பற்றிய குறிப்பே இல்லை ( பயிற்சி பெற்றார்?  )

 இவர் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றாரா அல்லது இலவசமாக மக்களுக்காக சேவை செய்கின்றாரா ?

அவருக்கு மாளிகை போன்ற வீடும் அலுவலகமும் பணியாளர்கள் மற்றும் குளுகுளு கார் பாதுகாவலர் இவள ஆட்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் அனுபவிக்கும் இவர்கள் மக்களுக்கு அரசின் திட்டங்கள்  பெப்பே பெப்பே காட்டுவது 
இந்தலட்சனத்தில் சார் பதிவாளர் இருந்தால் அவரின் கீழ் இயங்கும் அலுவலகங்களின் செயல் பாடு எப்படி இருக்கும்.

இந்த அவலம் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்". தமிழகம் முழுதும் உள்ள பெரும்பான்மை அலுவலர்கள் இப்படி தான் உள்ளார்கள் அவர்களைக் கண்டறிந்து வெளிச்சப் படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. வழிகாட்ட இந்தியன் குரல் இருக்கின்றது சட்டம் இருக்கின்றது 

இலஞ்சம் ஊழல் பெருகக் காரணமாக தன்பணி  செய்யாத கடமையை செய்யாத ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகும் திருப்பத்தூர் சார் ஆட்சியர் என்ன செய்தார் என்று தகவல் பெரும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டு மேலே குறிப்பிட்டவாறு பணி இவை அனைத்தும் அவர் தன கையெழுத்து இட்ட தகவல் உரிமைச் சட்ட விண்ணப்ப பதில்  கடிதத்தில் பெற்று அந்த அடிப்படியிலேயே  இவரது பணிகுறித்த ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களுடன் உரிய மன்றத்தில் புகார் அளிக்கப்படும். நாம் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பது விதி ஆம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டால் உரிய தண்டனை அளித்துத் தானே ஆகவேண்டும்.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் ஏற்பாடு செய்த தர்ணாவுக்கு அனுமதி மறுப்பு




இதை மக்களுக்கும் அரசுக்கும் விளக்கும் வண்ணம் தர்ணாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். காவல் துறை எஸ்பி அனுமதி வழங்குகிறார் ஆனால் டிஎஸ்பி அனுமதி அளிக்க மறுக்கின்றார். எஸ்பி உத்தரவை மீறிய சட்டம் ஒழுங்கு  டிஎஸ்பி 29 ஆம் தேதி நடைபெறும் தர்ணாவுக்கு 28 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அழைத்து  அனுமதி அளிக்கின்றேன் நடத்துங்கள் என்கிறார்.




எஸ்பி அனுமதி தரலாம் என்ற பிறகு டிஎஸ்பி அனுமதி தர மறுத்துள்ளார்
காரணம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் கொடுக்க வேண்டாம் என்று வாய் வழி  உத்தரவு.

இதை சட்டப்படி எடுத்துச் செல்லவும் இவர்களது கடமை தவறிய கண்காணிக்கத் தவறிய விவரங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டுள்ளோம்.

தர்ணாவுக்கு தடை போட்டதால் திருமண மண்டபத்தில் பொதுகுழு கூடி தீர்மானம் நிறைவேற்றி உரிய மன்றங்களுக்கு அனுப்ப முடிவு செய்து அதன் படி ஆலங்காயம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.



சார் ஆட்சியர் மட்டும் இல்லைங்க அவருக்கு துணைபோன டிஎஸ்பி உள்ளிட்ட அலுவலர்கள் எல்லோரும் மாட்டிக்கிட்டாங்க. அனுமதி  மறுத்தவர் அனுமதிக்கிறேன் வாருங்கள் என்று 12 மணி நேரம் முன்னர் கெஞ்சுகிறார் மக்களுக்கு தான் அலுவலர்களே தவிர அலுவலர்களுக்காக மக்கள் இல்லை என்று சொல்லி தர்ணா செய்ய அமைப்பினர் விரும்பவில்லை. காவல் துறை பல முறை கெஞ்சிக் கேட்டும் உங்களது மறுப்பை ஏற்றுக் கொண்டோம். நீங்கள் சொல்லும்போது மட்டும் தான் பொது மக்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்ற நிலை எங்களுக்கு தேவை இல்லை என்று தீர்க்கமாக அமைப்பினர் சொல்லிவிட்டனர்.தர்ணா போராட்டத்தை நடத்தவில்லை அதை கண்டன பொதுக் கூட்டமாக நடத்தினார்கள். முதலில் மறுத்தவர்கள் அனுமதிக்கிறோம் வாருங்கள் என்றதன் மர்மம் என்ன?. கோர்ட்டுக்கு போகவில்லை எந்த அலுவலரையும் தொடர்புகொள்ள வில்லை ஆனாலும் அவர்கள் கெஞ்சும் அளவில் நடந்தது என்ன? சட்டத்தை மீறி விதிமுறைகளை மீறி நடந்து கொண்டார்கள் அதனால் வரும் பாதிப்பை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் தான். தடுக்கப் பட்டவர்கள் சாதாரண குடிமக்கள் அல்லவே பல அலுவலர்களை வீட்டுக்கு அனுப்பிய தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள்.
 
அரசு அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள். மக்கள் முன்பு மாதிரி இல்லை அவர்கள் கேள்வி கேட்பார்கள் விவரமான மக்களை இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. முதலாளிகள் கேள்வி கேட்பார்கள்  அதற்கான சட்டபடியான நடவடிக்கைகள் தொடரும்.

உங்கள் ஊரிலுள்ள அலுவலர் பணி செய்யவில்லையா? நீங்களும் இது போன்ற குற்றங்களைக் கண்டறிய இந்தியன் குரல் உதவி தேவையா? தொடர்புக்கு காலை 10மணி முதல் 12 மணி வரை மட்டும் 9444305581, 9994658672, 9443489976 அடுத்த அலுவலகம் பற்றிய தகவல் வரும் பதிவில.

தகவல் உரிமைச் சட்டம் பயிற்சி சென்னையில் 12-05-13 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்
இந்தியன் குரல் அமைப்பு நன்கொடை பெறுவதில்லை, உதவி பயிற்சிக்கு கட்டணம் இல்லை, உறுப்பினர் சந்தா இல்லை  எங்களுக்கு ஆத்ம சந்தோசம் வருகிறவர்களுக்கு நிறைவான பலன் 

2 கருத்துகள்:

Sabareesan சொன்னது…

Good service. Thanks for the effort.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சட்டபடியான நடவடிக்கைகள் தொடரட்டும்... சேவைகளுக்கு வாழ்த்துக்கள்...