ஆதரவாளர்கள்

வெள்ளி, 24 ஜூன், 2016

பிரச்சனைகள் தீர்வுக்கு பயிற்சி

சென்னையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம்
நிலம் வீடு மனை தவறான பட்டா மாற்றம் தவறான பத்திரப் பதிவு ரத்து செய்ய போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வுக்கு
பயிற்சி நடைபெறும்
நாள் 26-6-16 ஞாயிற்றுக் கிழமை
பகல் 2.00 மணி முதல் மாலை 6 மணி வரையில்
இடம் கும்பட் காம்ப்ளக்ஸ் 29 ரத்தன் பஜார் சென்னை தொடர்புக்கு 9445249202
தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டால் தகவல் கிடைக்கவில்லையா? தகவல் ஆணையம் சென்றும் தகவல் கிடைக்கவில்லையா?



வியாழன், 26 மே, 2016

தொழில் தொடங்க கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

புகைப்படங்கள்
சுய தொழில் தொடங்கும் படித்த இளைஞர்கள், கடன் உதவி மற்றும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படித்த இளம் ஆண், பெண்களுக்கு ஒரு மாத தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்குப் பின் தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை.  மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் மற்றும் பிற வகுப்பினருக்கான வயது வரம்பு 45. இப்பயிற்சியில் பங்கேற்கும் தொழில்முனைவோர்கள்  ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உற்பத்தி அல்லது சேவை தொழிலில் முதலீடு செய்யலாம். கிண்டி, தொழிற்பேட்டையில் உள்ள தொழில்வணிகத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.   மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு பயிற்சிக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே ஓடி என்ன பயன்?

நல்லவர்கள் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரவேண்டும். நல்லவர்கள் எதற்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். சாமானியனுக்கு அரசின் திட்டங்கள் இலஞ்சம் கிடைக்கவேண்டும் அவர்களின் உரிமைகளுக்காக அலைந்து திரியாமல் கிடைக்கவேண்டும் என்று தானே. நமது உரிமையை இலஞ்சம் இல்லாமல் அலைந்து திரியாமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் நாம் பெற தகவல் சட்டம் இருக்கு
எப்படி யாருக்கு எழுதவேண்டும்? என்று தெரியாதவர்களுக்கு இந்தியன் குரல் அளிக்கும் இலவச பயிற்ச்சியில் கலந்து நீங்கள் தெரிந்துகொண்டு உங்கள் அருகாமை மக்களுக்கு உதவலாம். அரசின் திட்டங்கள் முறைகேடுகளை கண்காணித்து கேட்கலாம் தவறு நடந்திருந்தால் தண்டனைபெற்றுத் தரலாம். தகவல் சட்டம் அறிந்த ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான எதிர்கட்சியாக செயல்பட்டு அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க எதிர்கட்சி தலைவருக்கு உள்ள எல்லா அதிகாரமும் கொண்டவனாக செயல்பட முடியும்.


தகவல் சட்டத்தின் கீழ் எல்லா அரசியல் கட்சிகளும் 
1. தங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கேட்கும் தகவல்கள் அனைத்து அளிக்கக் கடமைப்பட்டவை 
2. கட்சியின் கொள்கை முடிவுகள் தலைமையின் செயல்பாடுகள் நிர்வாகிகள் தேர்வு வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தரவேண்டும்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

கெயில் இந்தியா நிறுவனத்தில் பாய்லர் ஆபரேஷன் மற்றும் சட்டப்பிரிவில் வேலை

கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் உற்பத்தியை விரிவாக்க இருப்பதால் பாய்லர் ஆபரேஷன் இன்ஜினியர்கள் மற்றும் சட்டம் படித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

ஊடகம் நினைத்தால் மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு

ஊடக தோழர்களே!
பிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்கு தீர்வும் தரவேண்டும். அந்த வகையில் மக்களுக்கு தேவையான நிகழ்ச்சியை நடத்தும் முன்னோடி ஊடகம் மக்களால் வாழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமே இந்தப் பதிவு. 

புதன், 13 ஏப்ரல், 2016

நேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.





இது நான் பங்கேற்று வரும் கேப்டன் நியுஸ் சானலின் "காகிதத்தில் ஓர் ஆயுதம் நிகழ்ச்சி" பற்றிய பதிவு

இது ஒரு நேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் தொடர்பு கொள்ளும் நேயர்களின் தகவல் சட்ட சந்தேகங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது தீர்க்கபடாத பிரச்சனைகளுக்கு தகவல் சட்டத்தை எப்படி கையாள்வது மற்றும் தீர்வு பெறுவது என்று உடனடியாக ஆலோசனை வழங்கி வருகின்றேன்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அரசுத்துறையும், அதன் செயல்பாடுகள் பயன்கள் செயல்பாடு குறித்து தொடர்ந்து நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றேன்.

இதுவரை

தகவல் சட்டம் 

தகவல் சட்டம் மூலம் தன தேவைகளை பெறுவது எப்படி? 

கல்விக்கடன் 

குடும்ப அட்டை 

வீடு நிலம் வாங்க 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 

மின் இணைப்பு மற்றும் மின்தடை புகார் 

பட்டா பெயர் மாற்றம் 

வேளாண்மை 

தோட்டக்கலை

போன்ற துறைகளின் செயல்பாடுகள், மக்களுக்கு அளிக்கும் சேவைகள், பயன்கள், மக்கள் தங்கள் தேவைகளுக்கு யாரிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் ? விண்ணப்பம் செய்தால் எத்துனை நாட்களுக்குள் தீர்வு? குறிப்பிட்ட நாட்களுக்குள் சேவை அளிக்க தவறினால் யாரிடம் புகார் அளிப்பது?

மேற்கன் துறைகளில் மக்கள் இலஞ்சமின்றி அனைத்து பயன்களையும் பெற தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளேன்.

இதுபோல வாரம் ஒரு துறை வீதம் இனி வரும் வாரங்களில் இன்னும் உள்ள மக்களுக்கு அத்தியாவிசய பயன்களை அளிக்க உள்ள அனைத்து துறைகளைப் பற்றி சொல்ல இருக்கின்றேன்.

"உலக சாதனை" ..

3-4-16 வரை தொடர்ந்து 10 வாரங்கள் இந்நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் கேப்டன் நியுஸ் சானல் உலக சாதனை படைத்துள்ளது.

ஆம்

ஒரே நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒரே சிறப்பு விருந்தினரைக் கொண்டு நேரலை நிகழ்ச்சி அதிக வாரங்கள் தொடர்ந்து நடத்திவரும் சாதனை

இதுவரை உலகத்தில் எந்த ஒரு சானலும் செய்யாதது.

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பிரச்சனைக்கு நேரலையில் தீர்வு சொல்லும் நிகழ்ச்சியை நிகழ்ச்சி வேறு எந்த தொலைக்காட்சியும் செய்யவில்லை.

உங்கள் ஒரு நிமிட நேரத்தை ஒதுக்கி அலைபெசிமூலம் அல்லது மின்னஞ்சல் மூலமாக சாதனைகளை படைத்துவரும் கேப்டன் நியுஸ் தொலைக்காட்சிக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கமளியுங்கள். 

நல்லது யார் செய்தாலும் அவர்களை மனதார பாராட்டுவது நாட்டுக்கு நல்லது. 

கேப்டன் நியுஸ் தொலைக்காட்சி தொடர்புக்கு 

Captain Media PVT LTD,

2A/2 Mettukuppam Road,

Vanagaram,

Maduravoyal,

Chennai 600095.

Phone No : 044- 30134567

Fax No : 044- 30134568

மின்னஞ்சல் மூலமாக உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க : jothiramalingam@captainmedia.in, 

news@captainmedia.in

முதன் முறையாக மக்களுக்கான நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சிக்கு உங்களது ஆதரவை தெரிவிப்பதன் மூலம் இந்நிகழ்ச்சி அனைவரையும் சென்றடையட்டும்.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடது என்ற அன்பான கோரிக்கைகள் எனக்கு வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அதைவிட அதிகமாக நிகழ்ச்சி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் வந்தவண்ணம் உள்ளது.

அனுபவங்கள்; 

தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்து அதில் தெரிவித்ததை போல செயல்பட்டு இலஞ்சம் கொடுக்காமல் 30 நாட்களில் மின்

இணைப்பு பெற்றுவிட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஒரு நண்பர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியைப் பார்த்து குடும்ப அட்டைக்காக போராடிக்கொண்டு இருந்த விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு முதல் பட்டா பயர் மாற்றம் செய்ய இயலாமல் இருந்த சென்னை நண்பருக்கு இதில் தெரிவித்த கருத்துக்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்து பாராட்டியுள்ளார்.

இதுபோல் பல மாவட்டங்களில் இருந்து இலஞ்சம் கொடுக்காமல் அரசின் திட்டங்களையும், பயன்களையும் பெற்றோம் என்ற வெற்றி செய்திகள் வரவேண்டும். அதற்க்கு உங்களின் ஆதரவு தேவை.

மகிழ்வுடன் 

பாலசுப்ரமணியன் 

www.voiceofindian.org